WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Sunday 17 May 2015

இயற்கை விவசாய உணவுகளுக்கான ஒரு தளம் naturetolife.com.

நம் முன்னோர்கள் உணவே மருந்தாக எடுத்துக்கொண்டனர் .ஆனால், இன்று நஞ்சில்லா உணவை பெறுவது என்பது இயலாத காரியமாகி விட்டது .
இயற்கை விவசாயம் இப்போது புத்துயுர் பெற்று வருகிறது.இயற்கை விவசாயத்தில் விளைந்த உணவை உட்கொள்வதன் மூலம் இன்றைய நாகரிக
நோய்களான சர்க்கரை வியாதி,உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களில் இருந்து நம்மை எளிதில் விடுவித்து கொள்ளலாம்.

நம்மாழ்வாரின் மீதும், இயற்கை விவசாயம் மீதும் கொன்ற தீவிர பற்றின் காரணமாக அதற்காக ஒரு தளத்தை உருவாக்கியுள்ளோம்.இதில் இயற்கை விவசாயத்தில் விளைந்த அணைத்து
பொருள்களையும் வாடிக்கையாளர்கள் எந்த இடத்தில் இருத்தும் பெறுவதற்கான வசதியையும் செய்துள்ளோம்(Online transaction with all cards and smart phone support).

ஆரம்ப கட்டமாக ,இயற்கை விவசாயத்தில் மூலம் கிடைக்க பெற்ற எண்ணெய் வகைகளும்,சிறு தானியமும் எங்கள் தளத்தில் விற்பனை செய்கிறோம்.
மேலும் பல பொருள்களை (வெல்லம்,பணங்கருப்பட்டி,குளியல் பொடி,குழந்தைகளுக்கான இனிப்பு தின்பண்டங்கள் முதலிய)விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
நீங்கள் இயற்கை விவசாயத்தில் உள்ளவர் எனில், உங்கள் பொருளை இணைய தளத்தில் விற்பதற்கு எங்களை அணுகவும்.

http://www.naturetolife.com/#!contact-us/c15n8

மேலும் இந்த தளம் வளர்ச்சி அடைய இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

எங்கள் தளத்தில் அதிகம் விற்பனையாகும் பொருள்கள் -ஒரு பார்வை

நிலக்கடலை எண்ணெய் :

முக்கியமாக நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.
மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை
செய்யும் கொழுப்பை(LDL) குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது(HDL).நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது.
இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம்
விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

நல்லெண்ணெய் :

அனைவரும் ஆலிவ் எண்ணெயில் மட்டும் தான் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன என்று நினைக்கிறோம்.
ஆனால் நல்லெண்ணெயிலும் அதிகளவு சத்துக்கள் அடங்கியுள்ளது.மேலும் இந்த எண்ணெய் சைவ உணவாளர்களுக்கு மிகச் சிறந்த ஒரு உணவுப் பொருள்.
ஏனெனில் இந்த எண்ணெயில், முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீனுக்கு நிகரான அளவில் புரோட்டீனானது நிறைந்துள்ளது.

நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.
மேலும் , நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

பஞ்சதீபம் எண்ணெய் :

ஒளி வடிவான இறைவனை பஞ்சதீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த
பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.இன்று சந்தையில் கிடைக்கும்
எண்ணெய் மலிவான எண்ணையின் கலவையாகவே உள்ளது.ஆனால் எங்கள் தளத்தில் விற்கப்படும் எண்ணெய் , தூய்மையான 100% நல்லெண்ணெய்,விளக்கெண்ணெய்,தேங்காய் எண்ணெய்,
நெய்,பூங்கண் எண்ணெய் கலவையாகும்.

பஞ்சதீபத்தில் உள்ள ஒவ்வொரு எண்ணெயின் பயன்கள் :

நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும்
விளக்கெண்ணெய் - அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது
தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்
நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
பூங்கண் எண்ணெய் - சகல காரிய வெற்றி

கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும்,
தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.இந்த உண்மையை பல நிறுவனங்கள் மறைத்து விடுகின்றன.

சிறு தானியம் :

காலையில் இட்லி, மதியம் சாப்பாடு, இரவு தோசை என மூன்று நேரமும் அரிசி உணவுகளைதான் சாப்பிடுகிறோம்.
இந்தியாவில், அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில்தான் இந்த நிலை. இதனால்தான் சர்க்கரை வியாதிக்காரர்கள் இங்கே அதிகம் இருக்கிறார்கள்.
இதற்காக சிறுதானிய வகைகளை மூன்று நேரமும் சாப்பிட வேண்டும் என்கிற அவசியம் கிடையாது.
தினமும் ஒருவேளை மட்டும் சாப்பிடலாம். தாது உப்புகள், நார்ச்சத்து, புரதம், விட்டமின் என எல்லா சத்துகளும் இவற்றில் அதிகம் இருக்கின்றன.

சிறுதானியத்தை கூழாகவோ, கஞ்சியாகவோதான் குடிக்க வேண்டும் என்பது கிடையாது.பிரியாணி, விதவிதமான ஸ்நாக்ஸ் எல்லாம் சிறுதானியத்தில் செய்யமுடியும்
மேலும் விவரம் அறிய எங்கள் தளத்தை சொடுக்கவும்
http://www.naturetolife.com/#!Millets-recipes/c21zr/5542245a0cf21fee1359abb3

சிறு தானிய வகைகள் : ராகி (Finger Millet) ,திணை(Foxtail Millet),சோளம்(Great Millet),
வரகு (Kodo Millet),கம்பு(Pearl Millet),சாமை(Little Millet) மற்றும் குதிரைவாலி (Barnyard Millet)

எங்கள் தளம் கணினி மற்றும் ஸ்மார்ட் போன் மூலமாகவும் ஆர்டர் செய்யும் வகையில் வடிவமைக்கப்பெற்றது,
ஆர்டர் செய்ய விருபினால் இங்கே சொடுக்கவும்,
http://www.naturetolife.com/#!store/c18nj

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...