WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Showing posts with label Tamil Movies Reviews. Show all posts
Showing posts with label Tamil Movies Reviews. Show all posts

Sunday 14 June 2015

இனிமே இப்படித்தான் – திரை விமர்சனம்

நாயகன் சந்தானம் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். எந்நேரமும் கடுகடுவென இருக்கும் இவருடைய அப்பா ‘ஆடுகளம்’ நரேன் சொந்தமாக திருமண மண்டபம் வைத்து நடத்தி வருகிறார். சந்தானத்தின் அம்மா பிரகதியோ மிகவும் தெய்வ பக்தி நிறைந்தவர். அதேநேரத்தில் ஜாதகத்திலும் அதிக நம்பிக்கை கொண்டவர்.
ஒருநாள் இவர்கள் சந்தானத்தின் ஜாதகத்தை ஒரு ஜோசியகாரரிடம் கொண்டு போய் கொடுக்கின்றனர். ஜாதகத்தை பார்க்கும் ஜோசியக்காரர், சந்தானத்துக்கு இன்னும் மூன்று மாதத்திற்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அப்படி இல்லையென்றால் இன்னும் நான்கு வருடம் கழித்துதான் திருமணம் நடக்கும்.
அப்படியும் நடக்கவில்லையென்றால், சாமியாராக மாறக்கூட வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்.
இதைகேட்ட சந்தானத்தின் பெற்றோர்கள் சந்தானத்திற்கு உடனே பெண் பார்க்க தொடங்குகிறார்கள். இவர்கள் பார்க்கும் பெண்கள் யாரும் சந்தானத்திற்கு பிடிக்காமல் போகிறது.
இந்நிலையில் சந்தானத்தின் நண்பரான விடிவி கணேஷ், பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம், அழகான பையனுக்கு அசிங்கமான பெண்ணையும், அழகான பெண்ணுக்கு அசிங்கமான பையனையும் தான் திருமணம் செய்து வைப்பார்கள் என்று கூறி காதல் திருமணத்தின் மீது ஈர்ப்பை உண்டாக்குகிறார்.
இந்த அறிவுரையை கேட்ட சந்தானம், அழகான பெண்களை தேடி காதலிக்க ஆரம்பிக்கிறார். இவருக்கு ஏற்றார்போல் எந்த பெண்ணும் கிடைக்காத நிலையில், ஒரு சண்டையில் அஷ்னா சவேரியை பார்க்கிறார்.
பார்த்தவுடனே அவர் மீது காதல் வயப்படுகிறார். அதன்பின் அஷ்னா சவேரி பின்னாலேயே சுற்றி சுற்றி வந்து தன் காதலை கூறுகிறார். ஆனால் அஷ்னா, சந்தானத்தின் காதலை ஏற்க மறுக்கிறார்.
இந்நிலையில், சந்தானத்தின் பெற்றோர்கள் அகிலா கிஷோரை பெண் பார்க்கிறார்கள். அஷ்னா சவேரி தன் காதலை ஏற்றுக் கொள்ளாததாலும், சந்தானத்தின் மாமாவான தம்பி ராமையாவின் சூழ்ச்சியாலும் அகிலா கிஷோரை திருமணம் செய்ய சம்மதித்து, இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடக்கிறது. இந்த நேரத்தில், அஷ்னாவுக்கு சந்தானத்தின் மீது காதல் வருகிறது.
இறுதியில் சந்தானம் அஷ்னாவின் காதலை ஏற்றுக் கொண்டு திருமணம் செய்தாரா? அல்லது பெற்றோர்கள் பார்த்த அகிலா கிஷோரை திருமணம் செய்தாரா? என்பதை காமெடியோடு சொல்லியிருக்கிறார்கள்.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம், நாயகனுக்கான அந்தஸ்தை இந்த படத்தில் முழுதாக பெற்றிருக்கிறார். முந்தைய படத்தை விட இப்படத்தில் அதிக திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நடனம், காதல் காட்சிகள், சண்டைக்காட்சிகள், சென்டிமென்ட் என அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார். அவருடைய வழக்கமான டைமிங் காமெடி இப்படத்தில் அவருக்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இரண்டு பெண்களுக்கு மத்தியில் இவர் மாட்டிக்கொள்வது, தாய் மாமாவான தம்பிராமையாவை கலாய்ப்பது, விடிவி கணேஷை கலாய்ப்பது ஆகிய காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது.
முதல் நாயகியான ஆஷ்னா சவேரி மாடர்ன் பெண்ணாக வலம் வந்திருக்கிறார். பாடல் காட்சிகள், சந்தானம் மீது காதல் வயப்படும் காட்சிகள், சந்தானம் மீது கோபப்படும் காட்சிகள் என தன் திறமையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இரண்டாம் நாயகியான அகிலா கிஷோர் குடும்ப பெண்ணாக வந்து மனதில் பதிந்திருக்கிறார். சந்தானத்திற்கு அப்பாவாக வரும் ஆடுகளம் நரேன், அம்மா பிரகதி, டெய்லராக வரும் விடிவி கணேஷ், தாய் மாமா தம்பி ராமையா, மற்றும் நண்பர்களாக வருபவர்கள் ஆகிய அனைவரின் நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
காதல் கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் முருகானந்த், அதில் நகைச்சுவையை கலந்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நகைச்சுவையில் ரசிகர்களுக்கு பஞ்சமில்லாமல் விருந்து படைத்திருக்கிறார்.
படத்திற்கு பலமே திரைக்கதைதான். ஒரு காட்சியில் கூட ரசிகர்களை தொய்வடைய விடாமல் படத்தை சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார். கிளைமாக்சில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் ரசிகர்களை கூடுதலாக ரசிக்க வைத்திருக்கிறது.
சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. இவருடைய பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
இவருடைய இசையில் அமைந்துள்ள பாடல்கள் கோபி ஜெகதீஷ்வரனின் ஒளிப்பதிவோடு சேர்ந்து பார்க்கும்போது மிகவும் அழகாக இருக்கிறது. மேலும், தன்னுடைய ஒளிப்பதிவில் நடிகர்கள், நடிகைகளை அழகாக காண்பித்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘இனிமே இப்படித்தான்’ எல்லாமே சூப்பர்தான்.

ரோமியோ ஜூலியட் – திரை விமர்சனம்

எந்த ஒரு விஷயத்தையும் பாசிட்டிவாக நினைக்கும் ஒரு இளைஞன், அதேபோல் எந்தவொரு பாசிட்டிவான விஷயத்தையும் நெகட்டிவாகவே யோசனை செய்யும் ஒரு இளம்பெண். ரெண்டு பேருக்கும் காதல் வருகிறது. இந்த காதல் கடைசிவரை நிலைத்து நின்று கைகூடியதா? இல்லையா? என்பதுதான் ரோமியோ ஜூலியட் படத்தின் கதை.
ஒரு பெரிய ஜிம்மில் கோச்சராக இருக்கிறார் ஜெயம் ரவி. இவர் சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை அனைவருக்கும் கோச்சராக இருப்பதால், அனைவரும் இவரிடம் சகஜமாக பழகுகின்றனர்.
ஒருமுறை ஆர்யாவுக்கு டிரெயினிங் கொடுப்பதற்காக விமானத்தில் எகானமி கிளாஸில் பயணம் ஜெயம் ரவியை பார்க்கும் ஏர் ஹோஸ்டஸான ஹன்சிகா அவர் பெரிய பணக்காரர் என்று புரிந்து கொள்கிறார்.
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட ஹன்சிகா, பெரிய பணக்காரரை காதலித்து ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் என்ற கனவோடு இருக்கிறார். அதனால் பணக்காரரான ஜெயம் ரவியை காதலித்து தனது கனவை நிறைவேற்றிக் கொள்ள முடிவெடுக்கிறார்.
அவரிடம் காதல் சொல்ல ஒவ்வொரு முறை இவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிகிறது. ஒருகட்டத்தில் ஜெயம் ரவியே ஹன்சிகாவை நேரில் பார்த்து அவளது அழகில் மயங்கி, காதலில் விழுகிறார். அதன்பிறகு இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள்.
ஒருநாள் தங்களது காதலை, ஜெயம் ரவியின் பெற்றோரின் கவனத்துக்கு கொண்டு சென்று திருமணம் செய்துகொள்ள காதலர்கள் இருவரும் முடிவெடுக்கிறார்கள். அந்த சமயத்தில் ஜெயம் ரவி, பெரிய பணக்காரன் இல்லை, சாதாரண ஒரு ஜிம் கோச்தான் என்பது ஹன்சிகாவுக்கு தெரிய வருகிறது.
அவனை திருமணம் செய்துகொண்டால் தனது கனவு நிறைவேறாது என்பதால் அவனை வெறுத்து ஒதுக்குகிறாள். ஆனால், அவளது பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத ஜெயம் ரவி, அவளையே பின்தொடர்கிறார்.
ஆனால், வாழ்க்கையை சந்தோஷமாக வாழ பணம்தான் தேவை. அன்பு முக்கியமில்லை என்று ஜெயம் ரவியை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கிவிட்டு செல்கிறாள் ஹன்சிகா.
இறுதியில், ஹன்சிகா தனக்கு விருப்பமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து சந்தோஷமாக வாழ்ந்தாரா? ஹன்சிகாவை மறந்து ஜெயம் ரவி வேறொரு வாழ்க்கையை தேடிக்கொண்டாரா? என்பதே மீதிக்கதை.
ஜெயம் ரவி, பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறார். இவரை பார்க்கும்போது யாரும் இவரை காதலிக்க முடியாது என்று கூறமுடியாது. அந்த அளவுக்கு இந்த படத்தில் இளமையாக இருக்கிறார்.
சற்று உடல் பெருத்திருந்தாலும் அவரை ரசிக்கமால் இருக்க முடியவில்லை. அதேபோல், நடிப்பையும் ரொம்ப ஜாலியாக எடுத்துக் கொண்டு நடித்திருக்கிறார்.
படத்தில் ஜெயம் ரவியைவிட ஹன்சிகாவுக்குத்தான் காட்சிகள் அதிகம் வைத்திருக்கிறார் இயக்குனர். அவருக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகளும் கொடுத்திருக்கிறார். அனைத்தையும் கவனமாக கையாண்டு சிறப்பாக நடித்திருக்கிறார் ஹன்சிகா.
ஜெயம் ரவியை கழட்டி விடுவதற்காக இவர் செய்யும் கலாட்டாக்கள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. அதேபோல், ஜெயம் ரவியை மறக்க முடியாமல் தவிக்கும் காட்சிகள், அவருக்கு இன்னொரு பெண்ணை ஏற்பாடு செய்துகொடுக்கும் காட்சிகள் என எல்லாவற்றிலும் வெவ்வேறு விதமான முகபாவனையுடன் அழகாக நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார்.
பெரிய பணக்காரராக வரும் வம்சி கிருஷ்ணா ஆர்ப்பாட்டமில்லாமல் அசத்தலாக நடித்திருக்கிறார். பூனம் பாஜ்வா கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார். ஒரு சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார்.
இயக்குனர் லக்ஷமன் ஒரு நல்ல காதல் கதையை தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு அழகான காதல் கதையை திரையில் பார்த்த உணர்வு நமக்கு கிடைத்திருக்கிறது.
வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்து நிற்க பணம் தேவையில்லை. உண்மையான அன்புதான் தேவை என்பதை ஒவ்வொரு காதலருக்கும் புரிய வைத்திருக்கிறார்.
இந்த படத்துக்கு பிறகு ஏனோ தானோவென்று காதலிப்பவர்கள்கூட உண்மையான காதலர்களாக மாறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் படத்தை எடுத்திருக்கிறார்.
அந்த நம்பிக்கை வீண்போகாது என்று சொல்லலாம். படம் முழுக்க காதலை மட்டுமே சொல்லாமல், கதையோடு ஒட்டிய காமெடியையும் புகுத்தியிருப்பது படத்திற்கு மேலும் சிறப்பு.
இமான் இசையில் பெரும் சர்ச்சையை சந்தித்த ‘டண்டணக்கா’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. அதேபோல், ‘அரக்கி’ பாடலும் துள்ளி ஆட வைக்கிறது. ‘தூவானம்’ பாடல் நல்ல மெலோடி ரகம்.
வைக்கம் விஜயலட்சுமி பாடிய ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ பாடல் நல்ல மெசேஜாக அமைந்துள்ளது. பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார்.
படத்திற்கு மற்றொரு பெரிய பலம் சவுந்தரராஜனின் ஒளிப்பதிவுதான். இவருடைய ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கலர் புல்லாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘ரோமியோ ஜூலியட்’ அழகான காதல்.

Saturday 6 June 2015

MASSU-Thiraivimarsanam

சூர்யாவும் பிரேம்ஜியும் ராயப்பேட்டை பகுதியில் திருட்டுத் தொழில் செய்து வருகிறார்கள். இவர்கள் ஒருநாள் டாஸ்மாக் கடையில் சென்று கொள்ளையடித்து வருகிறார்கள். அதில், நிறைய பேர் கூட்டு இருப்பதால், இவர்களுக்கு குறைந்த அளவே பணம் கிடைக்கிறது. அதிக பணம் வேண்டும் என நினைக்கும் இவர்கள், கஸ்டமஸ் அதிகாரிகள் போல் நடித்து கப்பலில் பணம் வைத்திருக்கும் ஒரு கும்பலிடம் சென்று பணத்தை எடுத்து வந்து விடுகிறார்கள்.
பணத்தை பறிகொடுத்த கும்பல், சூர்யாவை அடையாளம் கண்டுகொள்கிறது. அவன் கஸ்டம்ஸ் அதிகாரி இல்லை என்பதை அறிந்து, அவனை தேடி கண்டுபிடித்து, அவனிடமிருந்து பணத்தை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்கிடையில், சூர்யா தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நயன்தாரா மீது காதல் கொள்கிறார். நயன்தாராவிடம் தனது காதலை சொல்ல ஒவ்வொரு முறையும் முயற்சிக்கிறார்.
நயன்தாரா ஒரு மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். அவர் அதே மருத்துவமனையில் நிரந்தர பணியாளராக பணியாற்ற துடிக்கிறார். ஆனால், மருத்துவமனை டீனோ மூன்றரை லட்சம் கொடுத்தால் அவளை பணியில் நிரந்தரம் செய்வதாக கூறுகிறார். இதனால் அந்த பணத்தை எப்படியாவது புரட்ட முடிவெடுக்கிறாள். ஒருகட்டத்தில் இதை தெரிந்துகொண்ட சூர்யா, அவளுக்கு உதவி செய்வதாக உறுதிகொள்கிறார். அப்போது, சூர்யாவின் காதலையும் நயன்தாரா ஏற்றுக்கொள்கிறார்.
இந்நிலையில், பணத்தை பறிகொடுத்த கும்பல் சூர்யாவை தேடி கண்டுபிடித்து, தங்களுடைய இருப்பிடத்திற்கு கொண்டு சென்று விசாரிக்கிறார்கள். ஆனால், சூர்யாவோ தன்னிடம் பணம் இல்லை என்று அவர்களிடம் கூறுகிறார். கடைசியில், அந்த கும்பலிடம் சண்டை போட்டு அங்கிருந்து தப்பிக்கிறார்கள். சண்டையின் முடிவில், கொள்ளையடித்த பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு காரில் செல்லும்போது, விபத்துக்குள்ளாகி இவர்களது கார் சின்னாபின்னாமாகிறது.
சூர்யாவும், பிரேம்ஜியும் இறந்துவிட்டதாக இவர்களை துரத்தி வந்த கும்பல் திரும்பிச் செல்கிறது. இந்நிலையில், சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு வாரம் கடந்ததும், அங்கிருக்க பிடிக்காமல், மருத்துவமனையில் இருந்து வெளியே வருகிறார். அப்போது, கருணாஸ், சண்முகராஜ், ஸ்ரீமன் ஆகியோர் கொண்ட ஒரு கும்பல் சூர்யா மீது ஒரு கண் வைக்கிறது. அவர்கள் பணத்தை தேடி வந்த கும்பல்தான் என்று நினைத்து, அவர்களிடமிருந்து சூர்யாவும் பிரேம்ஜியும் தப்பித்து சென்று தங்கள் வீட்டை அடைகின்றனர்.
அப்போது அந்த வீட்டில் ஏதோ உருவம் நடமாடுவதுபோல் சூர்யாவுக்கு தெரிகிறது. சூர்யாவை துரத்தி வந்த கருணாஸ், ஸ்ரீமன் கும்பல் அவரது வீட்டுக்கும் வந்துவிடுகிறது. அவர்களிடமிருந்து தப்பித்து செல்ல முடிவெடுக்காமல் நேருக்கு நேர் சந்திக்க புறப்படும் சூர்யாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர்கள் அனைவரும் பேய் என்பது அவருக்கு தெரிய வருகிறது. உடனே, அங்கிருந்து பயந்து ஓடி ஒரு கோவிலுக்குள் செல்கிறார்.
அப்போது, கோவிலில் இருக்கும் பெரியவர் சூர்யாவை பார்த்து, நீ செத்துப் பிழைத்தவன் என்பதால்தான் பேய்களெல்லாம் உன் கண்களுக்கு தெரிகிறது. அவர்களுடைய ஆசையை உன் மூலம் தீர்த்துக் கொள்ள உன்னைத் தேடி வந்திருக்கிறார்கள். இது உனக்கு ஒரு வரம் என்று கூறி, சூர்யாவை மேலும் வியப்படைய வைக்கிறார்.
பேய்கள் தங்கள் கண்களுக்கு மட்டுமே தெரியும் என்பதால், சூர்யாவும், பிரேம்ஜியும் நிஜவாழ்க்கையில் பேய்களை தெரிந்துகொள்ளும் ஆதிகாலத்து டெக்னிக்கை பயன்படுத்துகிறார்கள். செல்போனில் போட்டோ எடுத்தால் பேய்கள் போட்டோவில் தெரியாது. அதனால் செல்போனில் போட்டோ எடுத்து யார் பேய், யார் மனிதன் என்பதை தெரிந்துகொள்கிறார்கள். அப்போது பிரேம்ஜியையும் சூர்யா போட்டோ எடுக்கிறார். ஆனால், அந்த போட்டோவில் பிரேம்ஜி தெரிவதில்லை. அப்போதுதான் சூர்யாவுக்கு பிரேம்ஜி இறந்துவிட்டான் என்பது தெரிகிறது. இருப்பினும் ஆவியாக தன் பக்கத்திலேயே இருப்பதால் சூர்யாவுக்குள் எந்த மாற்றமும் தெரிவதில்லை. எப்பவும் போல் ஜாலியாக இருக்கிறார்.
ஒருகட்டத்தில் நயன்தாராவுக்கு உதவி செய்வதாக கூறிய சூர்யாவிடம் தற்போது எந்த பணமும் இல்லாததால், பேய்களின் உதவியை நாடி அந்த பணத்தை சம்பாதிக்க முடிவெடுக்கிறார். அதன்படி, பேய்களை எல்லாம் ஒன்றுதிரட்டி, அவர்களிடம் ஒரு சந்திப்பு ஏற்படுத்துகிறார். எனக்கு உதவி செய்தால், உங்களுக்கும் உதவி செய்கிறேன் என்று கூறுகிறார்.
இறுதியில், பேய்கள் எல்லாம் சூர்யாவுக்கு உதவி செய்து நயன்தாராவுக்கு வேண்டிய பணத்தை பெற்றுக் கொடுத்ததா? பேய்களின் ஆசைகளை சூர்யா நிறைவேற்றினாரா? என்பதை விறுவிறுப்புடனும், திகிலுடனும் சொல்லியிருக்கிறார்கள்.

Monday 22 December 2014

லிங்கா திரை விமர்சனம்


லிங்கா – திரை விமர்சனம்


Lingaa Rajiniநடிகர் : ரஜினி
நடிகை : அனுஷ்கா
இயக்குனர் : கே.எஸ் ரவிக்குமார்
இசை : ஏ.ஆர்.ரகுமான்
ஓளிப்பதிவு : ஆர் ரத்தினவேலு
சோலையூர் கிராமத்தில் ஊர் தலைவராக இருந்து வருகிறார் விஸ்வநாத். இவரை அந்த ஊர் மக்கள் அனைவரும் மதித்து, இவருடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு வருகிறார்கள். இந்த ஊரின் எம்.பியான ஜெகபதி பாபு அரசு அதிகாரியான பொன்வண்ணனை கொலை செய்கிறார். இதில் பொன்வண்ணன் உயிர் பிரிவதற்குமுன் விஸ்வநாத்திடம் ஊரில் பல ஆண்டுகளாக மூடியிருக்கும் கோயிலை திறக்க வேண்டும் என்று கூறிவிட்டு இறக்கிறார்.
அந்த கோயிலை திறக்க வேண்டுமானால் கோயிலை கட்டிய லிங்கேஸ்வரனின் வாரிசுகள் தான் திறக்க வேண்டும். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில் விஸ்வநாத்தின் பேத்தியான அனுஷ்கா லிங்கேஸ்வரனின் வாரிசான லிங்கா என்னும் ரஜினியை தேடி செல்கிறார்.
சென்னையில் ரஜினி தன் நண்பர்களான சந்தானம், கருணா ஆகியோருடன் திருட்டு தொழில் செய்து வருகிறார். இவர்கள் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு ஜெயிலிலுக்கு செல்கிறார்கள். இவர்களை அனுஷ்கா தன் முயற்சியால் ஜெயிலில் இருந்து விடுவிக்கிறார். அதன்பின்பு ரஜினியிடம் லிங்கேஸ்வரனின் பேரனான நீங்கள் சோலையூர் கிராமத்துக்கு வரவேண்டும் என்றும் கோவிலை திறக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அதற்கு ரஜினி என் தாத்தா எனக்காக ஏதும் செய்யவில்லை ஆதலால் நான் வரமாட்டேன் என்று கூறி மறுக்கிறார்.
அதன்பின்பு ரஜினி தன் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு 1.5 கோடி மதிப்புள்ள ஒரு நகையை திருடுகிறார். இந்த நகையை சேட்டான மதன்பாப்பிடம் கொடுக்கிறார். இவரை போலீசில் சிக்க வைக்கிறார் அனுஷ்கா. இதையறியும் ரஜினி, மதன்பாப்பால் நாமும் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து அனுஷ்காவுடன் சோலையூர் கிராமத்திற்கு செல்கிறார்.
அங்கு ஊர் தலைவரான விஸ்வநாத், ரஜினியிடம் இந்த கோயிலில் உள்ள லிங்கம் மரகத கல்லால் செய்யப்பட்டது. இதை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறார். பல கோடி மதிப்புள்ள மரகத லிங்கத்தை திருடி விற்றால் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்று எண்ணி கோயிலுக்கு செல்கிறார். அங்கு கோயிலுக்கு யாரோ சென்று விட்டார்கள் என்று நினைத்து மக்கள் கோயிலை சுற்றி வளைக்கிறார்கள். இதிலிருந்து தப்பிப்பதற்காக ரஜினி கோயிலை திறந்து பூஜை செய்கிறார். அப்போது மக்களிடம் விஸ்வநாத், ரஜினியின் தாத்தா லிங்கேஸ்வரனின் பெருமைகளை எடுத்து கூறுகிறார். இதைக்கேட்ட ரஜினி, தன் தாத்தாவின் உயர்ந்த எண்ணத்தையும் உள்ளத்தையும் எண்ணி வருந்துகிறார். இதனால் இந்த ஊரை விட்டு செல்ல நினைக்கிறார்.
அப்போது விஸ்வநாத், அரசு அதிகாரியான பொன்வண்ணனை யாரோ கொலை செய்து விட்டதாகவும், இந்த ஊரில் உள்ள பாலத்திற்கும், கோயிலுக்கும் ஆபத்து இருக்கிறது என்றும் கூறுகிறார். நீங்கள் கொலை செய்தவர்களையும், இந்த ஊரையும் காக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
அதன்பிறகு இந்த ஊரின் எம்.பி.யாக இருக்கும் ஜெகபதிபாபு, ஊரில் உள்ள பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டி அதில் ஊழல் பண்ணலாம் என்று திட்டமிட்டு வருவது ரஜினிக்கு தெரிய வருகிறது. இறுதியில் ஜெகபதிபாபுவின் திட்டத்தை முறியடித்தாரா? பாலத்தை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
சூப்பர் ஸ்டாரின் அறிமுக பாடல் அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. வழக்கம்போல் தன் தோளில் மொத்தப் படத்தையும் சுமந்து கொண்டு ரசிகர்களை திருப்தி செய்கிறார். இரண்டு கதாபாத்திரத்திலும் அவருக்கே உரிய ஸ்டைலில் அசத்தியிருக்கிறார். கம்பீரமான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். இவர் பேசும் வசனங்கள் எல்லாம் திரையில் தீ பறக்கிறது. இவரின் சின்ன சின்ன ரியாக்ஷன்ஸ் மிகவும் ரசிக்கும்படி அமைந்துள்ளது.
மற்ற கதாநாயகிகள் போல் பாடல் காட்சிகளுக்கு வந்து செல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார் அனுஷ்கா. இரண்டாம் பாதியில் அழகாக வந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சோனாக்‌ஷி சின்ஹா.
சந்தானத்தின் காமெடி படத்தில் பெரிதும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ரஜினியுடன் இவர் சேர்ந்து திருடும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.
குறுகிய காலத்தில் கதை, திரைக்கதை அமைத்து ரசிகர்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றார் போல் சூப்பரான படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரால் மட்டுமே இயக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இவரது அனுபவம் திரையில் ஒவ்வொரு காட்சிகளிலும் நன்றாகவே தெரிகிறது. 6 மாத காலத்தில் நிறைய கதாபாத்திரங்களை வைத்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து பிரம்மாண்டான பாடல் காட்சிகளை உருவாக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது.
ரத்தினவேலு என்னும் ராண்டி, ராட்டினம் போல் அணையின் பிரம்மாண்ட காட்சியை நம் கண்முன் நிறுத்துகிறார். ரெயில் சண்டை காட்சிகள் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார். இரண்டு காலங்களுக்கு இடையேயான காட்சிகளை ஒளிப்பதிவு செய்வதை திறமையாக கையாண்டிருக்கிறார்.
பிரம்மாண்டத்திற்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்திருக்கிறது ஏ.ஆர்.ரகுமானின் இசை. இந்தியனே… பாடல் ஒவ்வொரு ரசிகர்கள் மனதிலும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘லிங்கா’ ரசிகர்கள் மனதில் நிற்கிறார் கிங்கா.

Monday 24 November 2014

நாய்கள் ஜாக்கிரதை – திரை விமர்சனம்


நாய்கள் ஜாக்கிரதை – திரை விமர்சனம்

நவம்பர் 22, 2014
8b216758-8576-4c77-9856-49afd8fff826_S_secvpfராணுவ முகாமில் பயிற்சி பெற்று வருகிறது நாய் மணி. இதன் பயிற்சியாளர் தீவிரவாதிகளால் குண்டடி பட்டு இறந்து விடுகிறார். இதனால் மணி, சிபி இருக்கும் பக்கத்து வீட்டிற்கு இடம் பெயர்கிறது.
போலீஸ் அதிகாரியான சிபி பணியில் இருக்கும் போது ஒரு பெண்ணை கடத்திய கும்பலுடன் மோதுகிறார். இதில் சிபிக்கு காலில் குண்டு பாய்ந்து காயமடைகிறார். சிகிச்சை பெற்று வீட்டில் மனைவி அருந்ததி மற்றும் தங்கையுடன் ஓய்வெடுத்து வருகிறார்.
சிபியின் பக்கத்து வீட்டில் இருப்பவர் சொந்த ஊருக்கு செல்வதால் மணியை நான்கு நாட்கள் பார்த்துக் கொள்ளுமாறு கூறுகிறார். இதற்கு சிபி மறுக்கிறார். இதனால் பக்கத்து வீட்டுக்காரர் அவரது வீட்டிலேயே மணியை கூண்டில் அடைத்து விட்டு செல்கிறார்.
சில சிறுவர்களால் மணிக்கு தொல்லை ஏற்பட உடனே மணியை காப்பாற்றி வீட்டிற்குள் அழைத்து செல்கிறார் சிபி. பிறகு பக்கத்து வீட்டுக்காரர் இறந்துவிட, மணி இராணுவத்தில் பயிற்சி பெற்ற நாய் என்று சிபிக்கு தெரிய வருகிறது. இதனால் மணியுடன் பாசத்துடன் பழக ஆரம்பிக்கிறார் சிபி.
ஓய்வு முடிந்து சிபி வேலைக்கு சென்ற சமயத்தில் சிபியின் மனைவி அருந்ததியை ஒரு மர்ம கும்பல் கடத்துகிறது. கும்பலை பற்றி விசாரிக்கும் போது, இதற்குமுன் தாக்குதல் நடத்திய கும்பல் என்று சிபிக்கு தெரியவருகிறது. மனைவியை தேடி அலைகிறார். மனைவியை விடுவிக்க வேண்டும் என்றால் பணம் வேண்டும் என்று கடத்தல் கும்பலின் தலைவன் பாலாஜி மிரட்டுகிறான்.
இதனால் பணம் கொடுத்து தன் மனைவியை மீட்க சிபி செல்கிறார். அங்கு அருந்ததியை உயிருடன் சவப்பெட்டியில் வைத்து புதைத்துவிட்டதாக சொல்கிறார். சவப்பெட்டியில் உயிருடன் புதைக்கப்பட்ட அருந்ததி, 6 மணி நேரம் மட்டுமே உயிருடன் இருக்க முடியும் என்ற நிலையில், அந்த 6 மணி நேரத்திற்குள் தனது மனைவியை சிபி, மணி உதவியுடன் காப்பற்ற முயற்சி எடுக்கிறார். இதில் சிபி வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தில் சிபிராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் வந்திருந்தாலும், சிறப்பான ரீ என்ட்ரீ என்றே சொல்லலாம். இது இவருக்கு ஒரு முக்கியமான படம். போலீஸ் அதிகாரியாக மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மனைவியை காணாமல் பதைபதைக்கும் காட்சியில் இயல்பாக நடித்து மனதில் நிற்கிறார். சிறு வேடமாக இருந்தாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார் அருந்ததி.
படத்தில் மணி என்னும் முக்கியமான கதாபாத்திரமாக நாய் நடித்துள்ளது. படத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து பட்டைய கிளப்பி ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது. மணிக்கு சிறப்பாக பயிற்சி கொடுத்தவருக்கு அதிக பாராட்டுகளை தரலாம்.
ஒருபடம் வெற்றிப் பெற வேண்டுமானால், கதை மற்றும் ஹீரோவைத் தவிர ரசிகர்களை கவரக்கூடிய வேறு ஏதாவது ஒன்று வேண்டும் என்பதை புரிந்துகொண்ட இயக்குனர் சக்தி செளந்தர் ராஜன், ஒரு நாயை மையப்படுத்தி கதையை சுவாரஸ்யமான திரைக்கதையால் நகர்த்தியுள்ளார். இடைவெளியில் நல்ல திருப்பத்தை கொடுத்தாலும் பிற்பகுதியில் சிறு தொய்வு ஏற்படுகிறது.
தரணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக டாக்கி டாக்கி பாடல் ஆட்டம் போட வைக்கிறது. இவரது பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. நிஸார் ஷாபியின் ஒளிப்பதிவில் திரில்லர் படத்திற்குண்டான அனைத்து அம்சங்களையும் காண முடிகிறது.
மொத்தத்தில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ மிரட்டல்.

வன்மம் – திரை விமர்சனம்


வன்மம் – திரை விமர்சனம்

நவம்பர் 22, 2014 da40989b-0a92-4270-8b66-f14a458304b1_S_secvpfவிஜய் சேதுபதியும் கிருஷ்ணாவும் நெருங்கிய நண்பர்கள். விஜய் சேதுபதி ஊரின் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர். கிருஷ்ணா நடுத்தரவர்க்க குடும்பத்தை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் வேலைக்கு செல்லாமல் ஜாலியாக ஊரை சுற்றி பொழுதை கழித்து வருகிறார்கள்.
மறுபக்கம் மதுசூதனனும் சுப்ரமணியபுரம் ராஜாவும் பிசினஸ் பார்ட்னர்கள். ஆனால், தொழிலில் சண்டை ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள். மதுசூதனனின் தங்கையான சுனைனாவை கிருஷ்ணா காதலித்து வருகிறார். இந்த விஷயம் மதுசூதனனுக்கு தெரிந்ததும் முதலில் கிருஷ்ணாவை கண்டித்து அனுப்புகிறார். அதை மீறியும் கிருஷ்ணாவும் சுனைனாவும் சந்திக்கிறார்கள்.
இதனால் கோபமடையும் மதுசூதனன், கிருஷ்ணா, விஜய் சேதுபதி ஒன்றாக இருக்கும் போது கிருஷ்ணாவை அடிக்க செல்கிறார். அப்போது பெரிய மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் எதிர்பாராத விதமாக விஜய் சேதுபதி மதுசூதனனை கொலை செய்து விடுகிறார். இதனால், மன வேதனை அடைகிறார் விஜய் சேதுபதி. இவர் இப்படி இருக்கும் நிலையில் கிருஷ்ணாவிற்கும் விஜய் சேதுபதியும் சில காரணங்களால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள்.
மதுசூதனனின் எதிரியான சுப்ரமணியபுரம் ராஜா, மதுசூதனனின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்துகிறார். இதிலிருந்து அந்த குடும்பத்தை காப்பாற்றுகிறார் விஜய் சேதுபதி. தான் செய்த தவறுக்காக மதுசூதனன் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அவர்களுடன் இருந்து வருகிறார் விஜய் சேதுபதி.
அதேசமயம், நண்பர்கள் பிரிந்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கிருஷ்ணாவை தன் வசமாக்கி மதுசூதனனின் குடும்பத்தை அழிக்க நினைக்கிறார் ராஜா.
இறுதியில் பிரிந்த நண்பர்களான விஜய் சேதுபதியும் கிருஷ்ணாவும் ஒன்று சேர்ந்தார்களா? கிருஷ்ணா, சுனைனா காதலில் ஜெயித்தார்களா? ராஜாவிடம் இருந்து மதுசூதனனின் குடும்பத்தை விஜய் சேதுபதி காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் விஜய் சேதுபதி ராதா என்னும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் முறையாக ஆக்‌ஷனில் களம் இறங்கிய இவர் தன் நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். படம் முழுக்க வெள்ளை சட்டை வெள்ளை வேட்டியுடன் பெரிய மனிதர் தோரணையுடன் வலம் வருகிறார். இவருடைய ஆக்‌ஷன் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
படத்தில் கிருஷ்ணா, செல்லதுரை கதாபாத்திரத்தில் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆடல் பாடல் என யதார்த்தமான நடிப்பை காண்பித்திருக்கிறார். நாயகியான சுனைனா நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கிறார். ஆனால், வழக்கமான சினிமா பாணியில் அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை கொடுத்த படங்களை விட நட்புக்கு மரியாதை கொடுத்த படங்கள்தான் அதிகம். அந்த வரிசையில் நட்பை கதைக்களமாக வைத்து இந்த படம் உருவாகியிருக்கிறது. முதல் பாதியில் திரைக்கதையில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும், பிற்பகுதியில் அதனை சரிசெய்து பாராட்டு பெற்றிருக்கிறார் இயக்குனர் ஜெய் கிருஷ்ணா.
தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பாலா பரணியின் ஒளிப்பதிவை ரசிக்கலாம்.
மொத்தத்தில் ‘வன்மம்’ யதார்த்தம்.
Related Posts Plugin for WordPress, Blogger...