WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Sunday 8 January 2017

பெண்களும் குற்றவியல் சட்டமும் Women's law in India


   பெண்களும் குற்றவியல் சட்டமும் 


பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகிக் கொண்டே போகிறதால், பெண்களின் உடல், திருமணம், மதிப்பு, பெண்மை போன்றவற்றை பாதுகாக்கும் வகையில் இது தொடர்பான குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 1860 பல பிரிவுகளால் தண்டனை வழங்க வகை செய்துள்ளது.



இந்திய தண்டனைச் சட்டத்தில் அத்தி யாயங்கள் 16,20 மற்றும் 22 ஆகியவை பெண்களுக் கெதிரான குற்றங்கள் பற்றி விவரிக்கின்றன. பிரிவு 304(தீ) மணக்கொடை மரணங்கள் பற்றியது

1) தீக்காயங்கள் அல்லது உடற்காயங்கள் அல்லது சாதாரணமான சூழலில் ஏற்படும் மரணம்

2) அம்மரணம் திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் ஏற்பட்டால் 3) கணவனாலோ அல்லது அவரது உறவினர்களாலோ அப்பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தால்

4) மணக்கொடைக்காக அல்லது அது தொடர்பாக மேற்படி வன்கொடுமை செய்யப்பட்டிருந்தால்

5) அக்கொடுமை அப்பெண் இறப்பதற்கு முன்பு ஏற்பட்டிருந்தால், அந்த மரணம் மணக்கொடை மரணம் எனக் கருதப்பட்டு குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஆயுள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை வழங்கப்படும். குறைந்தது ஏழு ஆண்டு சிறைத் தண்டனை என்பதே குற்றத்தின் கடுமையை சுட்டிக் காட்டுகிறது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 312 முதல் 318 வரை கருக்கலைப்பு, பிறக்காத குழந்தைக்கு காயம், குழந்தையை கவனிப்பாரற்று விட்டு விடுதல் போன்ற குற்றங்களை விவரிக்கிறது. அதற்கான தண்டனை களையும் விவரிக்கிறது.

கருக்கலைப்பு தடுப்புச் சட்டம் 1971 மற்றும் கருச்சோதனை தடுப்புச் சட்டம் 1994 இயற்றப்பட்டு கருக்கலைப்பு சிசுக்கொலை குற்றங்களாக கருதப்பட்டு தண்டனை தர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் 354-இன்படி ஒரு பெண்ணின் பெண்மைக்கு களங்கம், ஊறு விளைவித்தால் இரண்டாண்டு வரை நீடிக்கக் கூடிய சிறைத்தண் டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் விதித்து தண்டனை தரப்படும்.

இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 366-இன்படி ஒரு பெண்ணை கட்டாயத் திருமணத்திற்காகவோ, வன் புணச்சிக்காகவோ கடத்திச் சென்றால் பத்தாண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

பதினெட்டு வயதுக்கு குறைந்த சிறுமியை வன் புணர்ச்சிக்காக கடத்திச் சென்றால் பத்தாண்டு வரை சிறைத் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

வெளிநாட்டிலிருந்து விபச்சாரத்திற்காக 21 வயதுக்கு குறைந்த பெண்ணை இறக்குமதி செய்தால் பத்தாண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்க இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 366(ஆ) வகை செய்கிறது.

18 வயதுக்கு குறைந்த பெண்ணை விபச்சாரத்திற்கு விற்றால் பத்தாண்டுவரை சிறைத்தண்டனை என இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 372 கூறுகிறது., 18 வயதுக்கு குறைந்த பையன் ஆனாலும் திருமணம் ஆன பெண் ஆனாலும் இச்சட்டப்பிரிவு பொருந்தும்.

அதைப்போல விபச்சாரத்திற்காக மைனர்களை வாங்கினாலும் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 373 இன் படி குற்றமாகும் .

பெண்களுக்கெதிரான வன்புணர்ச்சி பற்றி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 375 முதல் 376ஞி. 377 மற்றும் 509 விவரிக்கின்றன. ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக வன்புணர்ச்சி செய்தால் குறைந்த பட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது பத்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய அல்லது ஆயுள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை வழங்கப்படும் என பிரிவு 376 கூறுகிறது., பாதிக்கப்பட்ட பெண் 16 வயதுக்குக் கீழ் இருந்தால் அவளது விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குற்றமே.

வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் அடையாளத்தையும் வெளிப்படுத்தினால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 228(அ)ன்படி இரண்டாண்டுகள் வரை நீடிக்கக் கூடிய தண்டனைக்கு ஆளாக நேரிடும். வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்ணின் நலனை பாதுகாக்கவே இந்த சட்டப்பிரிவு.

வன்புணர்ச்சி வழக்குகள் திறந்த நீதிமன்றத்தில் நடைபெறக்கூடாது. ரகசியமாக தனி அறையிலேயே நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவியல் காயங்களுக் கான இழப்பீடு வாரியம் ஒன்று அரசியல் சட்டப்பிரிவு 38(1) அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு பல ஆண்டுகள் ஆகியும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் கவலைக்குரிய விசயமாகும்.

திருமணம் தொடர்பான குற்றங்கள் பற்றி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 493 முதல் 498ல் விவரிக்கிறது.

தனது மனைவியல்லாத இன்னொரு பெண்ணுடன் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து ஏமாற்றி உடலுறவு கொள்வதை குற்றமெனக் கூறுகிறது பிரிவு 493.

தனது வாழ்க்கைத் துணை உயிரோடு உள்ள காலத்தில் இன்னொரு வரை மணப்பது பிரிவு 494,495 இன் கீழ் குற்றமாகும்.

மோசடி எண்ணத்துடன் திருமணம் புரிவது பிரிவு 496ன் கீழ் குற்றமாகும்.

கள்ளத்தொடர்பு கொண்டு வாழுதல் பிரிவு 494-ன் கீழ் குற்றமாகும்.

குற்ற நோக்கோடு ஒரு பெண்ணை கவர்ந்திழுத்தல் அலலது கூட்டிச் செல்லுதல் அல்லது அடைத்து வைத்தல் பிரிவு 498ன் கீழ் தண்டனைக்குரியது.

திருமணமான பெண்ணை கணவனோ அவரது உறவினர்களோ மணக்கொடைக்காக வன்கொடுமை செய்தால் பிரிவு 498(அ)ன் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய வர்களாவர். இச்சட்டப்பிரிவு 1983-இல் இயற்றப்பட்டது.

ஒருவர் ஒரு பெண்ணின் பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு வார்த்தை யாலோ, ஒலி எழுப்பியோ, சைகையின் மூலமோ அல்லது ஏதேனும் பொருளை வெளிப்படுத்தினாலோ அல்லது அப்பெண்ணின் தனிமையில் குறுக்கிட்டோலோ பிரிவு 509ன் கீழ் குற்றம் புரிந்தவராவார். ஓராண்டு வரை சிறைத்தண்டனையோ, அபராதமோ, அல்லது இரண்டும் விதித்து தண்டிக்கப்படுவார்.

Sunday 1 January 2017

தகவல் அறியும் உரிமை சட்டம் - தெரிந்தவைகளும், தெரியாதவைகளும் : 'RIGHT TO INFORMATION ACT' - KNOWN AND UNKNOWN!

"தகவல் அறியும் உரிமை சட்டம் "- தெரிந்தவைகளும், தெரியாதவைகளும் : 'RIGHT TO INFORMATION ACT' - KNOWN AND UNKNOWN!


அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டதுதான் இந்தியத் தகவல் உரிமைச் சட்டம்-2005.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த உரிமையை பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகள் மற்று அரசு சார்பு நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும். அரசுத் துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால் அதையும் இச்சட்டத்தின் கீழ் பெற முடியும். இந்தியக் குடியுரிமை பெற்ற எவரும் இந்தச் சட்டத்தின் வழியாக தகவல்களைக் கோர முடியும். இதன் வழியே 1. அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல் 2. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்.

3. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடிமக்களுக்கு, அதை அளிக்க வகை செய்தல். இதன் மூலம் லஞ்சம், ஊழல் போன்றவற்றை ஒழித்தல்.

4. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல். போன்றவை முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன.

தகவல் என்றால் என்ன?

தகவல் என்பது எதைக் குறிப்பிடுகிறது? என்கிற எண்ணம் நமக்கு வரலாம். தகவல் என்பது பதிவேடுகள், ஆவணங்கள், கடிதங்கள், இ-மெயில்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், மாதிரிகள் உள்ளிட்ட அனைத்துமே “தகவல்” என்ற பிரிவின் கீழ் வைக்கப்படுகின்றன. இதன்படி கீழ்காணும் அனைத்தும் தகவல்கள்தான்.

1. அரசிடமுள்ள ஆவணங்களில் இருந்து குறிப்புகள் எடுத்தல்

2. அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை நகல் எடுத்தல்

3. அரசின் பணிகளைப் பார்வையிடுதல்

4. அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பார்வையிடுதல்

5. சான்றளிக்கப்பட்ட மாதிரிகளைப் பெறுதல்

6. தேவையான தகவலைத் தேவைப்படும் வடிவத்தில் பெறுதல்

தகவல்களைப் பெறுவதன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கப் போகிறது? என்கிற கேள்வி நமக்குத் தோன்றலாம். ஒரு அரசு நிறுவனத்தில் இருந்து எந்தத் தகவலையும் பெற முடிகிறது. இதன் மூலம் அரசு நிர்வாகத்தின் பொறுப்பும், வெளிப்படையான செயல்களும் அதிகரிக்கிறது. இதன் மூலம் ஓரளவு லஞ்சம் மற்றும் ஊழல் போன்றவை குறைய வாய்ப்பிருக்கிறது. அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதையும் திட்டங்கள் அனைத்தும் மக்களை முறையாகப் போய்ச் சேருகின்றனவா என்பதையும் நாம் இந்தத் தகவல் உரிமைச் சட்டத்தின் வழியாகத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் குறைகள் இருப்பின் அதைச் சரி செய்ய வேண்டும் என்கிற பொறுப்பும் அரசுக்கு ஏற்படும். இதன் மூலம் இந்திய அரசியல் அமைப்பில் மக்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ள ஒரு வழி ஏற்படுகிறது.

தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 15-ன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இச்சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஆணையம், ஒரு மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீழ் கடந்த 07.10.2005 ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 5, உட்பிரிவு 1-ன்படி, தகவலுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு, தகவல் அளிப்பதற்காக ஒவ்வொரு அலுவலகத்திலும், பொதுத்தகவல் அலுவலர் என்கிற பொறுப்பில் ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும் உட்பிரிவு 2-ன்படி, தகவல் கோரும் விண்ணப்பங்களை அல்லது மேல்முறையீடுகளைப் பெற்று, அவற்றைப் பிரிவு 19, உட்பிரிவு 1-ன்படி, பொது தகவல் அலுவலருக்கோ அல்லது மாநில தகவல் ஆணையத்திற்கோ அனுப்பி வைப்பதற்காக அலுவலர் ஒருவர் ஒவ்வொரு உட்கோட்ட அல்லது உள்மாவட்ட நிலையில் உதவி பொதுத்தகவல் அலுவலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். தலைமைச் செயலகம், துறைத்தலைவர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்கள் போன்றவற்றில் தகவல் பெறுவதற்காக பொதுத்தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர் போன்றவர்களின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவைகள் தரப்பட்டுள்ளன. இவை குறித்த சில விபரங்கள் அரசின் இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 6-ன்படி, தகவல் பெற விரும்புபவர், ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில், ஒரு வெள்ளைத் தாளில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னணு வழியிலோ, உரிய அலுவலகத்திலுள்ள பொது தகவல் அலுவலர் அல்லது உதவிப் பொதுத் தகவல் அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன், இதற்கான கட்டணமாக ரூ.10/- (ரூபாய் பத்து மட்டும்) வரைவோலை (Demand Draft) அல்லது அரசு கருவூல சீட்டு (Treasury Challan) மூலம் செலுத்தி அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் ரூ.10/-க்கான நீதிமனற வில்லை (Court Fee Stamp) அந்தப் படிவத்தில் ஒட்டிவிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் ரூ.10/- செலுத்திய விபரம் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் தேவைப்படும் தகவலின் விபரங்களை எந்த வடிவத்தில் வழங்க வேண்டும் என்பது குறித்த தகவலுடன் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து வடிவில் விண்ணப்பம் செய்ய முடியாத நிலையில், அதனை எழுத்து வடிவில் செய்திட அனைத்து உதவிகளையும் பொதுத் தகவல் அலுவலர் அல்லது உதவிப் பொதுத் தகவல் அலுவலர் செய்திட வேண்டும். தகவலுக்காக விண்ணப்பம் செய்கிற விண்ணப்பதாரர்களிடம் அந்த தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்டல் மற்றும் அவரைத் தொடர்பு கொள்வதற்குத் தேவையான விபரங்களைத் தவிர, தனிப்பட்ட சொந்த விவரங்கள் எவற்றையும் கோருதல் கூடாது. ஒரு தகவலுக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகம் ஒன்றிடம் விண்ணப்பம் செய்யப்படுகிற நிலையில், அந்தத் தகவல் பிற அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களில் வைத்திருக்கப் பட்டதாக அல்லது அதன் உரிய பொருள் பிற அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயற்பணிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்கும் போது, அந்த விண்ணப்பத்தினை அல்லது அதன் உரிய பகுதியை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மாற்றல் செய்து அனுப்பி விட வேண்டும். மாற்றல் செய்து அனுப்பப்பட்ட விபரத்தை விண்ணப்பதாரருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு தகவல் கேட்கும் விண்ணப்பதாரகளுக்கு 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட்டாக வேண்டும். தகவல் 30 நாட்களில் கிடைக்காவிட்டால் அதே அலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவரும் 30 நாட்களுக்குள் சரியான தகவல்கள் அளிக்காவிட்டால் தமிழக தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்து தகவல் பெறலாம். தகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்கத் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.

மேல்முறையீட்டிற்கான அலுவலக முகவரிகள்: தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முகவரி: தலைமை ஆணையர், தமிழ்நாடு தகவல் ஆணையம், எண் 375, முதல் தளம், காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி கட்டிடம் , தேனாம்பேட்டை, அண்ணாசாலை , சென்னை- 18. தொலைபேசி எண்: 044 -24357580.

மத்திய தகவல் ஆணையத்தின் முகவரி: மத்திய தகவல் ஆணையர். மத்திய தகவல் ஆணையம், ஆகஸ்ட் கிராந்திபவன் 2 வது தளம், பி-பிரிவு. நியு பிகாஜி காமா பேலஸ் டெல்லி-110056

Friday 9 December 2016

Anna University UG PG Nov Dec 2016 Exams Postponed date & Revised Date - Notification

Anna University Nov Dec 2016 Exam Notification - Postponed dates/ revised time table

Anna University Students Here is the official notification regarding exam postponed dates and revised dates for nov dec 2016 Semester.

UPDATE on 03-11-2016
Anna University exams for UG and PG affiliated college students on scheduled on 18th and 19th November 2016 are postponed due to by elections . Rescheduled dates are as follows,
18/11/2016 (Friday) postponed to 13/12/2016 (Tuesday)
19/11/2016 (Saturday) postponed to 16/12/2016 (Friday)



UPDATE on 30/11/2016

Due to heavy rain forecast in Tamilnadu, the End semester Examinations (Nov-Dec 2016), of all Anna University affiliated colleges scheduled to be held on 01.12.2016 has been postponed to 24.12.2016 - COE

UPDATE on 01/12/2016


Due to heavy rain forecast in Tamilnadu, the End semester Examinations (Nov-Dec 2016), of all Anna University affiliated colleges scheduled to be held on 02.12.2016 has been postponed to 23.12.2016- COE

UPDATE on 05/12/2016

Due to the sudden demise of honorable Chief Minister Amma, all Anna University examinations scheduled between 06-12-2016 to 08-12-2016 are postponed. Revised Dates Announced Below

UPDATE on 09/12/2016



 


UPDATE on 13/12/2016
                      Due to heavy Vardha Cyclone in Tamilnadu, the End semester Examinations (Nov-Dec 2016), of all Anna University affiliated colleges Holiday On Tomorrow Exam14-12-2016..Reschedule Date Announced Later..- COE



UPDATE on 14/12/2016

         Due to heavy Vardha Cyclone in Tamilnadu, the End semester Examinations (Nov-Dec 2016), of all Anna University affiliated colleges 
scheduled to be held on 14.12.2016 has been postponed to 02.01.2017- COE



          There is no change in the Tomorrows(15-12-2016) Examinations.

Thursday 8 December 2016

பிரிவு 293 இந்திய தண்டனை சட்டம் Section 293 of Indian Law act


பிரிவு 293:

இதற்கு முன் சொல்லப்பட்ட பிரிவின்படி குற்றம் என்று கொள்ளத்தக்க ஆபாசப் பொருளை இருபட்து வயதுக்குக் குறைந்தவர்களுக்கு விற்பதும் வாடகைக்கு கொடுப்பதும் வழங்குவதும் காட்டுவதும் அவர்கள் மத்தியில் புழங்க விடுவதும் அல்லது அவர்களிடையே இத்தகைய செயல்களைப் புரிவதற்கு முயற்ச்சி செய்வதுன் குற்றமாகும்.

இந்தக் குற்றத்துக்கு ஆறு மாதங்கள் வரை சிறைக் காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தம் படி பொருளை கொடுப்பது மட்டுமல்ல பரப்பினாலும் தண்டனைக்கு உரிய குற்றமாகும்.

3 ஆண்டு வரை சிறைத்தண்டனை கொடுக்கப்படுகின்றது

பிரிவு 292 இந்திய தண்டனை சட்டம் Section 292 of Indian Law act


பிரிவு 292:

ஆபாசமான புத்தகத்தை, விளக்கத்தை, படத்தை, ஓவியத்தை, பொருளை அல்லது அமைப்பதும் விற்பதும் வாடகைக்குத் தருவதும் பிறருக்கு வழங்குவதும் பொதுமக்களுக்குக் காட்டுவதும் பொது மக்கள் அடையும் படி செய்வதும், உருவாக்குவதும், உற்பத்தி செய்வதும் தம் வசம் வைத்திருப்பதும் குற்றமாகும்.

அத்தகைய ஆபாசமான பண்டத்தை மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக இறக்குமதி செய்வதும் ஏற்றுமதி செய்வதும் குற்றம்

மேலே கூறப்பட்ட ஆபாசப் பொருட்களை மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக உண்டாக்கும் உற்பத்தி செய்யும், வாங்கும், வைத்திருக்கும், இறக்குமதி ஏற்றுமதி செய்யும், பிறருக்கு வழங்கும் அல்லது பொது மக்களின் பார்வையில் படும்படி அல்லது காட்டும் படி வைத்திருப்பது இதன் மூலம் வியாபாரத்தில் லாபம் பெறுவதும் குற்றமாகும்.

மேலே குறிப்பிட்டுள்ளபடி பிரிவின் கீழ் குற்றம் என்று கொள்ள தகும் எந்தக் காரியத்தையும் செய்கிறேன் அல்லது செய்ய தயாராக இருக்கிறேன் என்று விளம்பரம் செய்வதும் பிறருக்கு அறிவிப்பதும் குற்றமாகும்.இத்தகைய ஆபாசப் பொருட்கள் இன்னாரிடம் கிடைக்கும் என்று தெரியப்படுத்துவதும் குற்றமாகும்.

இந்த பிரிவின் கீழ் குற்றம் செய்ய முயற்சிப்பதும் குற்றமாகும். மூன்று மாத சிறைக் காவல் மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

விளக்கம்: மத சம்பந்தமான புத்தகம் வெளியீடு, எழுத்து, படம், ஓவியம் ஆகியவற்றிற்கும்; கோவிலில் அல்லது கோவில் ரதங்களில் பொறிக்கப்பட்டுள்ள செதுக்கப்பட்டுள்ள அல்லது உருவாக்கியுள்ளவற்றுக்கும் விளக்கப்பட்டுள்ளவையும் இந்த பிரிவில் பொருந்தாது
Related Posts Plugin for WordPress, Blogger...