WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Showing posts with label Health Tips. Show all posts
Showing posts with label Health Tips. Show all posts

Wednesday 9 September 2015

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...
நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”
ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே…! அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”
இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்..

Friday 4 September 2015

தினமும் செய்ய வேண்டியவை


1)சோகத்தை ~ Delete செய்யுங்க
2)சந்தோஷத்தை ~ save செய்யுங்க
3)சொந்தங்களை~ recharge செய்யுங்க
4)நட்புகளை ~Down load செய்யுங்க
5)எதிரிகளை ~Erase செய்யுங்க
6) உண்மையை ~Broad cast செய்யுங்க
7)துக்கத்தை ~switch off செய்யுங்க
8)வேதனையை ~Not reachable செய்யுங்க
9)பாசத்தை ~In coming செய்யுங்க
10)வெறுப்பை ~out going செய்யுங்க
11) சிரிப்பை ~In box செய்யுங்க
12)அழுகையை ~out box செய்யுங்க
13)கோபத்தை ~Hold செய்யுங்க
14)இன்முகத்தை ~send செய்யுங்க
15)உதவியை ~ok செய்யுங்க
16)இதயத்தை ~vibrate செய்யுங்க
பிறகு பாருங்க
வாழ்க்கை எனும் Ring tone சந்தோஷமாக ஒலிக்கும்
Have a relaxing day everyday.

Sunday 23 August 2015

ஆண்மை குறைவு ஏன் ஏற்படுகின்றது? எவ்வாறு தடுக்கலாம்? ஒவ்வொரு ஆணும் கண்டிப்பாக படியுங்க – மருத்துவரின் முழுமையான ஆலோசனை !

ஆண்மைக் குறைவு என்றால் என்ன?
o ஆண்குறி எவ்வாறு விறைப்படைகிறது?
o ஆண்மை குறையு ஏற்பட காரணங்கள்
 
  1. இரத்த ஓட்ட காரணிகள்
  2. நரம்பு மண்டல காரணிகள்
  3. ஹார்மோன் காரணிகள்
  4. நீரிழிவு காரணிகள்
  5. மனசு சார்ந்த காரணிகள்
  6. மருந்துகளால் ஏற்படும் ஆண்மைக் குறைவு
o ஆண்மை குறைவுள்ள ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள்?
o ஆண்மை குறைவின் விளைவுகள் யாவை?
o ஆண்மைக் குறைவை எவ்வாறு கண்டறியலாம் ?
o மருத்துவம் மற்றும் பொதுவான அறிவுரைகள்
இன்றைய நாகரீக உலகில் “பாலியல் உறவுகளை” பற்றி பல்வேறு கருத்துக்கள் உலவி வருகின்றன. இல்லற வாழ்க்கையை இன்பமாய் அமைக்க தாம்பத்ய உறவும் மிக அவசியம். இன்று ஒரு ஆண் தன்னுடைய ஆண்மையை நிரூபிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டான். ஏனென்றால் குழந்தையில்லாத ஒரு ஆணை இவ்வுலகம் ஆண்மையில்லாதவன் என்றே கூறுகிறது. ஆனால் பழங்காலத்தில் ஒரு ஆணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட மனைவி கள் இருந்ததாகவும், அத்தனை பேரையும் இல்லற உறவில் திருப்பதி அடையும் அளவிற்கு அவனிடம் உடல் வலிமை யாகவும், அயரா உழைப்பும், ஊக்கமான உணவு பழக்கங்களும் இருந்ததாகவும் கருத்து க்கள் உள்ளன. குழந்தையில்லாத அனைவரும் “ஆண் மையற்றவர்கள்” என்று கூறுவது மிகப் பெரும் தவறு. இனி ஆண்மைக் குறைவு பற்றி விரிவாக காணலாம்.
ஒரு ஆண் தாம்பத்ய உறவில் ஈடுபடும் பொழுது தன் குறியில் விரைவில் ஏற்படும்
விறைப்பு தளர்ச்சியினாலோ (அல்லது) விறைப்பு ஏற்படுவதில் அதிக நேரமானாலோ அல்லது விறைப்பே ஏற்படாமல் அந்த செய்கையை முழுமையாக செய்ய முடியாமல் போவதையே “ஆண்மைக் குறைவு ” என்கி றோம்.
ஆண்குறி எவ்வாறு விறைப்படைகிறது? 
(REGIDITY) : 
ஆண்குறியி லிருந்தோ அல்லது மூளையிலிருந்தோ ஏற்படும் நரம்பு தூண் டல்களால் ஆண் குறிக்கு இரத்தத்தை கொண்டு வரும் (HELICINE) ஹெலி னசன் என்னும் தமனி கள் (ARTERY) விரிவ டைந்து, இரத்த ஓட்டம் அதிகரிக்கப் பட்டு குறியில் உள்ள விறைப்பு தசை களில் (CARPORA CARVEROSA) உள்ள (LACUNAR SPACES) லஃகுனார் ள்ல்ஹஸ்ரீங்-ல்
இரத்தம் நிரம்பும் போது ஏற்படும் அழுத்தத்தில் குறி விறைப்படைய தொடங்குகிறது. அப்போது குறியிலிருந்து அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் (VENIS) சிரையை அது அழுத்தி குறியிலிருந்து இரத்தம் எடுத்துச் செல்லப்படுவது தற்காலிகமாக நிறுத்தப் படுவதால் விறைப்பு நிலைக்கிறது.
உள்ளே வரும் இரத்தம் நிறுத்தப்பட்டு வெளியே எடுத்துச் செல்லப்படும் VENOUS OUTFLOWநடக்கும் பொழுது குறி மீண்டும் தளர்ச்சியடைகிறது.
ஆண்மை குறையு ஏற்பட காரணங்கள் : 
1. இரத்த ஓட்ட காரணிகள் :

o ஆண்மை குறைவில் குறி விறைப்பு ஏற்படுவதில் தாமதமோ அல்லது ஏற்படா மலே இருக்க அந்த பகுதிக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாதுதான் முதன்மையான காரணம். ATHEROSCLEROSIS என்னும் நோயில் இரத்த குழாய்களில் கொழுப்பு படிவதா லும், குறி பகுதிகளில் ஏற்படும் காயங்களால், இரத்தக் குழாய்கள் கடினப்பட்டு சுருங்கி இரத்த ஓட்டம் தடைபடுகிறது.
o புகைப்பிடித்தல், உடல் பருமன் இவற்றால் இரத்த ஓட்டம் நிறைய பேருக்கு தடைபடலாம் என்பதில் ஐயமில்லை.
o சில ஆண்களுக்கு, குறிக்கு எடுத்து வரப்படும் இரத்த அளவைவிட அதிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்படும் ‘VENOUS OUTFLOW அதிகமாயிருந்தால் விறைப்பில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
o பொதுவாக மன அழுத்தம், அதிகஉடற்பயிற்சி, இருதய நோய், சர்க்கரை நோய் போன்றவற்றில் இவ்வாறு ஏற்படலாம்.
o சில நேரங்களில் உள்ளிருக்கும் விறைப்பு தசைகளில் (ELASTIC FIBRES) போதிய அளவு ஏற்படாமல் அது சிரைகளின் மீது(TUNICA VENIS) அழுத்தம் தரமுடியா விட்டாலும் ஏற்படலாம்.
o பொதுவாக வயதானவர்கள், அதிக கொலஸ்டிரால் அளவு, ஆஸ்த்மா, இரத்த சோகை உள்ளவர்கள் இவ்வாறு பாதிக்கப் படலாம்.
2. நரம்பு மண்டல காரணிகள் :  o முதுகு தண்டுவட நரம்புகள் குறிப்பாக பின் அடி முதுகில் ஏற்படும் பாதிப்புகள் ஒரு ஆணை “IMPOTENT” ஆக்க வாய்ப்புகள் அதிகம்.
o இந்த மாதிரியான பிரச்சனைகளில் 75 %பேர் குறைவான விறைப்பு தன்மையும் 25 % பேர் மட்டுமே பெண் குறியினுள் செலுத்தும் அளவிற்கு வீரியத்தையும் பெற்றிருப்பார்கள்.
o இவை பொதுவாக ” மல்டிபிள் ஸ்கிளிரோஸிஸ்” மற்றும் “பெரிமிரல் நியூரோபதி என்னும் நோய்களில் காணப்படும்.
o இந்த PERIPHERAL NEUROPATHY நோய் ஏற்பட நீரிழிவு நோயும் அதிகமது பழக்கமும் ஒரு காரணமாகும்.
o இடுப்பு எலும்பு கூட்டுப் பகுதியில் (PELVIS) ஏற்படும் அறுவை சிகிச்சைகள் குறிப்பாக பிராஸ்டேட், சிறுநீர் பை, போன்றவைகளில் பிரச்சினை களுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளால் “தானியங்கு” (AUTOMATICNERVES) நரம்புகள் அல்லது தமனிகள் பாதிக்கப்பட்டு IMPOTENCE ஏற்படலாம்.
o கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பின் போதும், நரம்புகள் பாதிக்கப்படலாம்.
3. ஹார்மோன் காரணிகள் :  o பாலியல் எண்ணங்கள் அல்லது காட்சிகள் அல்லது உறவுகளின் போது “டெஸ்ட்டோ ஸ்ட்ரோன்” என்னும் ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு ஆண் குறி விறைப்படைகிறது.
o “ஹைபோகோன்டிஸ்ம்” என்னும் நோயில் செக்ஸ் உறவுக்கு தேவையான அளவு இந்த”டெஸ்ட்டோஸ்ட்ரோன்” சுரப்பு இல்லாமை யால் அல்லது குறைவால் ஆண்மை குறைவு ஏற்படலாம்.
o “ஹைபர்புரோலக்டினிமீயா”என்னும் நோயில் ‘PROLACTIN ’எனும் ஹார்மோன்அதிகம் சுரக்கிறது.இதனால் ‘TESTROSTERONE’ ஹார்மோனின் அளவில் குறைவு ஏற்படுகிறது. இதன் மூலம் ஆண்மை குறைவு ஏற்படுகிறது.
o “ஹைப்பர்தைராய்டிஸம்” என்னும் நோயிலும் ஆண்மைக் குறைவு ஏற்படலாம்.
4. நீரிழிவு காரணிகள்:  o பொதுவாக 35-75 % நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படலாம்.
o மேற்கூரிய இரத்த ஓட்ட அல்லது நரம்புகாரணிகள் இதை உண்டாக்குகிறது.
o எந்தவொரு நீரிழிவு நோய் உள்ள ஆணுக்கும் “ஆண்மைக் குறைவு” ஏற்பட்டிருந்தால் அது “டயாபடிக் நியூரோபதியின்” ஆரம்ப கால அறிகுறியாகும்.
o நரம்பு அல்லது நாளமில்லா திசுக்களில் நைட்ரிக் அமிலம் உருவாக்கம் குறைந்துபோவதும் பாதிப்புகளுக்கு ஒரு காரணமாகும்.
5. மனசு சார்ந்த காரணிகள் : 
o அதிக கவலை
o மன அமைதியற்ற, நம்பிக்கையில்லா தாழ்வுநிலை
o நெருங்கிய நட்பில் பிளவு
o கவர்ச்சியில்லாத மனைவி
o குழந்தை வயதில் ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள்
o கர்ப்பமாகிவிடுவார்களோ என்ற பயம்
o பால்வினை நோய்கள் தொற்றிவிடுமோ என்ற அச்சம்
o மனரீதியான தோல்விகள்
o தனிமையான அறையில் தாம்பத்ய உறவு முடியாமல் உள்ள கூட்டு குடும்ப முறை
o உடலுறவு பற்றிய பயம்
o ஆர்வமில்லாத உடலுறவு
6. மருந்துகளால் ஏற்படும் ஆண்மைக் குறைவு :
o 25 % ஆண்கள் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளால் ஆண்மைக்குறைவை பெற்றுள்ளனர்.
o இரத்த கொதிப்பு நோய்க்கு தரப்படும், மருந்துகள் நேரடியாக ஆண்குறியின் விறைப்பு தசை (CARPORA) ல் பாதிப்பு ஏற்படுத்துவதாலும், மறைமுகமாக PELVIC(இடுப்பு எலும்பு பகுதிக்கு) இரத்த ஓட்டத்தை குறைப்பதாலும் ஆண்மை குறைவு ஏற்படலாம்.
o ஈஸ்ட்ரோஜன், அலசருக்கு தரப்படும் RANITIDINE,CIMETEDINE மற்றும் டையுரடிக்ஸ், போன்ற மருந்துகள் எஞசஅஈஞபதஞ டஏஐச உருவாகுவதை குறைப்பதாலும் மற்றும் ANDROGEN ஹார்மோன்
7. வேலைகளை தடுப்பதாலும் ஆண்மைக்குறைவு ஏற்படலாம். 
o அதிக கொலஸ்டிரால் மற்றும் இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தரப்படும் DIGOXIN, GEMFIBROZIL, CLOTIBRATE போன்ற மருந்துகள் “Na+ -K+ATPASE “என்னும் என்சைம் செல்லின் செயல்களில் பாதிப்பு ஏற்படுத்தி செல்சுவரை தாண்டி செல்லுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதை தடுக்கிறது.
ஆண்மை குறைவுள்ள ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள்?  o தாம்பத்ய உறவில் விருப்பம் இல்லை.
o உடலுறவில் உச்சநிலையை அடையவதில்லை.
o வாழ்க்கையே வெறுப்பாக இருக்கிறது.
ஆண்மை குறைவின் விளைவுகள் யாவை?
o தூக்கமின்மை
o மன அழுத்தம்
o வாழ்க்கை பற்றிய பயம்
o வீட்டிற்கு வருவதை தவிர்த்து வெளியிலேயே அதிகம் இருத்தல்
o தற்கொலை எண்ணங்கள்
o விவாகரத்து
o சந்தேகப்படுதல், அதிக கோபமாயிருப்பது போல் நடித்தல்
ஆண்மைக் குறைவை எவ்வாறு கண்டறியலாம் ?  o TESTPSTERON ஹார்மோன் அளவில் குறைதல்
o FSH ஹார்மோன் அளவில் குறைதல்
o ப3, ப4 ஹார்மோன் அளவில் குறைதல்
o முழு இரத்த பரிசோதனை – நீரிழிவு, கொலஸ்டிரால் எலக்ட்ரோலைட்
o PROLACTIN ஹார்மோன் அளவில் அதிகமாதல்
o அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் – பிராஸ்டேட் சுரப்பி வீக்கம்
o PENILE DOPPLER SCAN- குறியில் தமனிசுருக்கங்கள் (ART CONSTRICTION), தமனி அடைப்புகள் (ARTERIAL BLOCK) சிரையிவல் அதிக அளவு இரத்தம் எடுத்துச் செல்லப்படுதல் (VENOUS LEAK)
o RIGI ஸ்கேன் – தொடர்ந்து இரு இரவுகள் எடுக்கப்படலாம்.(IN SLEEP LAB) இரவில் எப்போதாவது ஆண்குறி விறைப்பு அடைந்துள்ளதா என்பதை அறிந்து உடல் ரீதியான அல்லது மன ரீதியான காரணங்களை அறிந்து கொள்ளஉதவுகிறது. சாதாரணமாக ஆண்களுக்கு அதிகாலை நேரங்களில் 2 அல்லது 3தடவை குறி விறைப்பு ஏற்படவில்லை என்றால் அது உடல் ரீதியான பிரச்சினைகள் அதாவத தமனிச் சுருக்கம், அடைப்பு, காரணம் என கொள்ளலாம்.
o ஆண்குறியை தொடும்போது உணர்ச்சிகுறைவாக இருந்தால் நரம்பு பாதிப்பு எனலாம்.
o அதிகமாக உடம்பில் மயிர் வளர்ச்சி, தலைவலி, வழுக்கை, மார்பக விரிவு இவைகள் ஹார்மோன் பாதிப்பு எனலாம்.
மருத்துவம் மற்றும் பொதுவான அறிவுரைகள் : 
o பொதுவாக அதிகாலையில் உடலுறவு செய்யலாம்.
o ஒரு தாம்பத்ய உறவிற்கும் தொடர்ந்து அடுத்த உறவிற்கும் அதிக இடைவெளி கூடாது. (வாரம் அல்லது 15 நாட்களுக்கு2 அல்லது 3 முறை இன்றை நிலைக்கு ஏற்ப)
o நேரடியாக உடலுறவை தவிர்த்து FOREPLAY செய்து உடல் கிளர்ச்சியடைந்த பின்பு செய்யலாம்.
o மார்க்கெட்டில் கிடைக்கும் மாத்திரைகள் முதலில் நன்கு வீரியமாகத்தான் இருக்கும். நாளடைவிமல் “ஆண்மைக் குறைவை” கண்டிப்பாக ஏற்படுத்தும்.
o ஆண்மைக் குறைவு அறிகுறிகள் ஏற்படுமாயின் தயங்காமல் மருத்துவரை அணுகவும், உங்கள் வெட்கம், பயம், தயக்கம், அறியாமை இவற்றை சாதகமாக பயன்படுத்தி பணம் பறிப்போர் ஏராளம்.
o ஆண் உறுப்பு சிறியதாக உள்ளது என கவலைப்படும் ஆண்கள் பலர். உண்மையில் பெண்ணி யோனிக்குழாயில் (VEGINA) 4 முதல் 5 செ.மீ. அதிக கிளர்ச்சி மிக்க பகுதியாகும். இதுவே அவர்களை உச்சநிலைக்கு அடைய செய்ய முடியும்.
நன்றி -Dr. J. ஷெல்டன் அருள்தாஸ் B.E.M.S. & Dr. G. சீனிவாசன் M.D.(E.H)
Special Thanks to
Tamilcineonline.com

Wednesday 24 June 2015

மூலிகை டீ மூக்கடைப்பு ஏற்படுவதை தடுக்கும்..!

சாதாரண டீ செய்து குடிப்பதற்கு பதிலாக, தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.


தண்ணீர் குடிச்சா இவ்வளவு நன்மையா!


***தண்ணீர் உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை நீக்கி சிறுநீர் மூலமாக வெளியேற்றி விடும்.
***இதனால் உடல் சுத்தமாகி பசி எடுக்க ஆரம்பிக்கும்.
***அதிகாலையில் தண்ணீர் குடித்து வந்தால் தலைவலி குறையும் அல்சரை தடுக்கும்.
***நம் உடலில் உள்ள இரத்தத்தில் தண்ணீரின் அளவு கூடுதலாக உள்ளது.
***தண்ணீரின் விகிதம் குறையும் போது ரத்தம் கெட்டியாக மாறும். ரத்த அழுத்தம் குறையும். மூளைக்கு இரத்தத்தின் வழியே செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். இதன் அளவு குறையும் போது மயக்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இரத்தம் கெட்டியாகி உடல் உறுப்புகளுக்கு செல்லாமல் இருந்தால் அந்த உறுப்புகள் செயலிழக்கும் வாய்ப்புகள் அதிகமாகிறது.
***சிறுநீரக பிரச்சனைகளுக்கு தண்ணீர் அதிகம் குடிக்காததே முக்கிய காரணமாக விளங்குகிறது.
நாளொன்றிக்கு நாம் அருந்த வேண்டிய தண்ணீரின் அளவு 5லிட்டர் ஆகும்.

Saturday 6 June 2015

பேசினால் இழப்பீர்கள்

கோபமாய் பேசினால் குணத்தை இழப்பீர்கள். அதிகமாய் பேசினால் அமைதியை இழப்பீர்கள். வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பீர்கள். வேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பீர்கள். ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பீர்கள். பொய்யாய் பேசினால் பெயரை இழப்பீர்கள். சிந்தித்து பேசினால் சிறப்போடு இருப்பீர்கள்,

பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும்?

பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும்?
1.வெளிப்படையாக பேசுபவர்கள்
2. அமைதியாக பேசுபவர்கள்
3. ஒவராக மொக்கை போடுபவர்கள்
4.ஓவராக கலாய்ப்பவர்கள்
5. ஹீரோ மாதிரி பந்தா காட்டுபவர்கள்
6.நல்லவனை போல் நடிப்பவர்கள்
7.பொறுக்கிதனம் செய்பவர்கள்
8.ஸ்டைலாக இருப்பவர்கள்
9. கறுப்பு நிறத்தவர்
10.வெள்ளை நிறத்தவர்.

நண்பர்கள் கவனத்திற்கு... படித்து விட்டு ஷேர் செய்யுங்கள்....................


தற்போது சீனாவில் நடந்த துயரச் சம்பவம் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற சீன தேசத்தை சேர்ந்த ஒருவர் அங்கு கடையில் விற்பனை செய்த பலாப்பழத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு கூடவே coco-cola வையும் அருந்தி இருக்கிறார்..இதனால் சிறிது நேரம் கழித்து நெஞ்சடைத்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.. மருத்துவ மனைக்கு கொண்டு சென்று பிரேத ப‌ரிசோதனை‌ செய்த போது தான் உண்மை தெரிய வந்துள்ளது.. அது என்னவென்றால் பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு உடனே COCO-COLA அருந்தியதால் அது விஷமாக மாறி இருக்கிறது.. அப்படி சாப்பிடுவது 5 அடி நாகப்பாம்பின் விஷத்துக்கு சமம்..அதனால் தயவு செய்து பலாப்பழம் சாப்பிட்டு எட்டு மணி நேரத்திற்கு COCO-COLA; PEPSI போன்ற பானங்களை அருந்தாதீர்கள்... தயவுசெய்து இதை அனைவருக்கும் பகிருங்கள்...
இவண்...... உங்களில் ஒருவன்.

Monday 18 May 2015

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை, அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை, அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா, தூத்துக்குடி பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, சொல்லும்போதே நாவில் நீர் ஊறுமே.
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா..??

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட.

மைதா எப்படித் தயாரிக்கிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள், அதுவே மைதா.

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது.

இது தவிர Alloxan என்னும் இரசாயனம், மாவை மிருதுவாக கலகபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபயகரமகுகிறது.

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது.

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல, மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும்.

இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது, எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.

Europe union, UK, China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள், இருதய கோளறு, நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர். மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போது ஆவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேள்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம்.

இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

வேம்பு பற்றி அறியாத சில தகவல்கள்.!

வெப்பம் தணிக்கும் வேப்ப மர நிழல்.! வேம்பு பற்றி அறியாத சில தகவல்கள்.!

* வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் நோய் உண்டாக்கும் நுண் உயிரிகளைக் (bacteria) கொல்லும் சக்தியை உடையது. வேப்பமரங்கள் அதிகமாக இருக்கும் கிராமங்களில் மற்ற இடங்களில் நோய்கள் பரவுவது போல் பரவுவது இல்லை.

* நன்றாக தழைத்து வளர்ந்து இருக்கும் வேப்ப மரத்தை தினந்தோறும் பார்த்து வந்தாலே கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும். அம்மரத்தின் அடியில் மாலை நேரங்களில் அமர்ந்து இருந்தாலே மன இறுக்கம் குறையும். உடல் உபாதைகளும் நீங்கும்.

* இதனால் தான் மன நல காப்பகங்களில் கூட அதிகமாக நாம் வேப்ப மரங்களை காண முடியும். இதனால் மன நலம் பாதிக்கபட்டவர்கள் குணமடைய வாய்ப்பு உண்டு.

* இயற்கையாகவே வேப்பமரத்தின் இலைகளின் நுனி பகுதிகள் பூமியை பார்த்த படியே கீழ் நோக்கி இருக்கும். இதனால் ஒளிச்சேர்கையின் போது வெளியாகும். பிராணவாயுவில் வெகு சக்தியுள்ள பிராண வாயுவின் ஒரு வகை (Ozone) (O3)கலந்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* மனித உடலில் உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரமாக வேம்பு திகழ்கின்றது. இம்மரத்தில் வேர், பட்டை, மரப்பட்டை, மரக்கட்டை , வேப்பங் கொட்டையின் மேல் ஓடு, உள்ளிருக்கும் பருப்பு, வேப்பமரத்து பால் , வேப்பம் பிசின், வேப்பங்காய், வேப்பம் பழம் , பூ, இலை , இலையின் ஈர்க்கு , வேப்பங் கொழுந்து போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளபடியால் அவை அனைத்துமே சித்த, ஆயுர்வேத முறை வைத்தியங்களில் மருந்துப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது.

* இதனால் தான் அம்மை கண்டுள்ள வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைக் தோரணம் கட்டி வைப்பார்கள் .இவ்வாறு வைப்பதினால் அம்மை நோயானது பரவாமல் இருக்கும்.அம்மை நோய்க்கு ஆளானவர்களை வேப்பிலை மீது தான் படுக்க வைத்திருப்பார்கள். இது அம்மை நோய் இறங்கும் போது உடம்பில் ஒரு வித நமைச்சலும் அரிப்பும் உண்டாகும்.

* இதைத் தடுக்கவே இவ்வாறு செய்கிறார்கள். அம்மை நோய் இறங்கிய பின் தலைக்குத் தண்ணீர் விடுவார்கள். அவ்வாறு தண்ணீர் விடும் சமயத்தில் வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து எடுத்த விழுதினை நோயாளியின் உடம்பு முழுவதும் பூசிப் பின் உடம்பைக் கழுவுவார்கள்.

* சமீப காலமாக அறிவியல் ஆய்வுகள் வேப்பிலைக்கு நச்சினை முறிக்கும் தன்மை மற்றும் நுண்ணிய விச கிருமிளையும் அழிக்கும் தன்மை உடையது எனத் தெளிவுபடுத்துகிறது.

* மேலும் குழந்தை பிரசவமான வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைத் தோரணம் கட்டி வைப்பார்கள். இவ்வாறு வைப்பதினால் வெளியிலிருந்து வருபவர்களிடமிருந்து நச்சுகிருமியானது தாய் சேய் இருவரிடமும் பரவாமல் தடுத்து இருவரையும் பாதுகாக்கும்.

* நீரழிவு என்று சொல்லகூடிய சர்க்கரை வியாதியையும் இது கட்டுபடுத்தும். எவ்வாறென்றால் வேப்பங் கொழுந்தை மை போல் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியின் கடுமை குறைந்து அதைக் கட்டுபடுத்தலாம் .மேலும் மஞ்சள் காமலை, குடற்புண், பாம்புகடி, வீக்கம், காய்ச்சல் போன்றவைகளையும் இது குணப்படுத்த வல்லது.

* வேப்பம்பூ ஆனது நிம்பசு(ஸ்)டி ரோல் என்ற பொருளை கொண்டுள்ளது. இது மனித உடலில் சுரக்கும் ஊக்கிகளில் (On hormones) ஒன்றை ஒத்துப் போவதால் இது பசியை தூண்டிடவும், பித்தம் , வாந்தி, வாதம் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது.

Thanks-Dinakarannewspaper

தாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..!

பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.

தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.

மூலிகை கசாயம்:

அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

முருங்கை கீரை:

முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.

அதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.

பிஸ்தா பருப்பின் மருத்துவ குணங்கள்:-

உடல் நலத்தை பாத்துகாக்கும் பிஸ்தா பருப்பின் மருத்துவ குணங்கள்:-

பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது, இரத்ததில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது.

பிஸ்தா பருப்பில் டெரிபின்தினேட், இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் அமிலம் ஆகியன காணப்படுகின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன.

பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேகவைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும். ஆண், பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட போக சக்தி அதிகரிக்கும்.

பிஸ்தா பருப்பு வைட்டமின் ஏ மற்றும் இ போன்ற ஆன்டிஆக்ஸிடெண்டுகளை அதிகப்படுத்தி இரத்த நாளங்களை பாதுகாக்கும் மேலும் இதயநோய் அபாயத்தை குறைக்கும் சக்தி கொண்டது...

பிஸ்தா உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதோடு ஆரோக்கியம் தரக்கூடிய கொழுப்பை அதிகரிக்கச்செய்யும். பிஸ்தா சாப்பிட்டால் டைப்2 நீரிழிவை பாதுகாக்கும். ஒரு கப் பிஸ்தா பருப்பில் 60% மினரல் பாஸ்பரஸ் கொண்டுள்ளது.

மேலும் அமினோஆசிட்ஸ், பாஸ்பரஸ் ஆசிட்ஸ் குளுக்கோஸ் ஆகியவற்றை குறைக்கவும் உதவிபுரிகிறது.. மேலும் பிஸ்தாவில் பாஸ்பரஸ் ஆனது அதிக அளவில் உள்ளதால், குளுக்கோஸை அமினோ அமிலமாக சிதைக்கிறது.

இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு பிஸ்தா ஒரு நல்ல பயனுள்ள உணவாகும். பிஸ்தா பருப்பில் வைட்டமின் பி6 ஊட்டச்சத்து அதிகளவு உள்ளது. வைட்டமின் பி6 ல் ஹீமோகுளோபின் அதிகப்படுத்தக்கூடிய தன்மையும், ஆக்ஸிஜனை ரத்தஓட்டம் வழியாக செல்களுக்கு கொண்டுசேர்க்கும் பொறுப்பு மற்றும் ஆக்ஸிஜனை அளவை அதிகரிக்கும் பணியை செய்கிறது.

உடற்பயிற்சியின் அவசியம் :-

ஓய்வு, உறக்கம், உடற்பயிற்சி இவை மூன்றும் மனிதனுக்கு அவசியத் தேவையாகும். ஆனால் அவை அளவோடு இருக்க வேண்டும். தேங்கிய குட்டை நீர் சாக்கடையாக மாறிவிடும். ஓடாத இயந்திரம் பழுதாகிவிடும். உபயோகமில்லா இரும்பு ஆயுதங்களில் துரு ஏறிவிடும். உழைக்காத, உடற்பயிற்சி செய்யாத உடலும் உருக் குலைந்துவிடும்.

* உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும், நம் உடலின் உறுப்புகளும், நரம்புகளும் புத்துணர்வடையும், தசைகள் நன்கு சுருங்கி விரிவடைவதால் உடல் பலமடையும்.

* உண்ட உணவு எளிதில் சீரணமடையும். அதன் சத்துக்கள் முழுவதும் உடலில் சீராக பரவும், இதயம் பலப்படும்.

* உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி தேவை இல்லை. ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம் தேவை.

* நல்ல காற்றோட்டம் நிறைந்த பகுதியில் அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்யும் முன் மலம், சிறுநீர் இரண்டையும் வெளியேற்றி விடவேண்டும்.

* மெல்லோட்டத்தை ஆங்கிலத்தில் ஜாகிங் என்பார்கள். விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டமாகும்.

* இந்த மெல்லோட்டத்தை ஆண் பெண் இருபாலரும் மேற்கொள்ளலாம். மெல்லோட்டம் செய்ய காலை நேரமே சிறந்தது.

* பருத்தியினாலான இறுக்கமில்லாத ஆடைகளை அணிந்துகெள்ள வேண்டும். ஆரம்பத்தில் 1/2 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது.

* அதுபோல் 50 வயதைக் கடந்தவர்கள் 5 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது. இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று ஓடலாம். தினமும் செய்யாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.

* மன அழுத்தம், மன எரிச்சல் நீங்குகிறது, நுரையீரலுக்கு போதுமான ஆக்ஸிஜனைப் பெற்று இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது, உடலின் எடை சீராக வைக்கப்படுகிறது.

* இதயத் தசைகள் வலுவாக்குகிறது, இதயம் சுருங்கி விரியும்போது இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது, இரவில் நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது, உடலின் தசைகள் வலுப்பெறுகிறது, எலும்புகளில் உள்ள சுண்ணாம்புச்சத்து குறைவைத் தடுத்து எலும்புகளை பலப்படுத்துகிறது.

* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, என்றும் இளமைப் பொலிவோடு இருக்க உதவி செய்கிறது, முதுமையைத் தள்ளிப்போட வைக்கிறது.

மெல்லோட்டம் சிறந்த உடற்பயிற்சியாகும். இதனை கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்.

படர்தாமரைக்கான சில எளிய கை வைத்தியங்கள்!!!

உங்கள் சருமத்தில் அழற்சி போன்று வட்ட வடிவில் சிவப்பாக ஏதேனும் இருந்தால், அது தான் படர்தாமரை. இந்த படர்தாமரையானது பூஞ்சையினால் ஏற்படக்கூடியது. மேலும் இந்த படர்தாமரை சருமம், நகம், ஸ்கால்ப், உள்ளங்கை அல்லது பாதங்களில் தான் அதிகம் ஏற்படும். இந்த நிலை முற்றினால், அது கடுமையான அரிப்புகளை ஏற்படுத்தும்.

மேலும் படர்தாமரை பரவக்கூடிய ஒன்று. அதிலும் சருமத்துடன் தொடர்பு கொண்டாலோ அல்லது அவர்கள் பயன்படுத்திய துணியை பயன்படுத்தினாலோ, இது பரவும். இது சருமத்தில் ஏற்படும் மற்ற பிரச்சனைகளைப் போன்றது அல்ல. எனவே படர்தாமரை உங்களுக்கு இருந்தால், அதனைப் போக்க உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதற்காக பல க்ரீம்கள், ஆயின்மெண்ட் போன்றவை கடைகளில் விற்கப்படுகிறது. இருப்பினும் இயற்கை மருத்துவத்தைப் போல் எதுவும் பலன் தருவதில்லை.

முக்கியமாக இந்த பிரச்சனை பெரியோர்களை விட குழந்தைகளுக்கு தான் அதிகம் ஏற்படும். எனவே குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

பூண்டு :-

பூண்டுகளில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களினால், இதன் நன்மைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அதிலும் படர்தாமரையை நீக்க, பூண்டு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு பூண்டை அரைத்து சாறு எடுத்து, அதனை படர்தாமரை உள்ள இடங்களில் தடவி வர வேண்டும்.

தேங்காய் எண்ணெய் :-

தேங்காய் எண்ணெயிலும் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. இதனைக் கொண்டு பல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். அதிலும் படர்தாமரை இருந்தால், அவ்விடத்தில் தேங்காய் எண்ணெயை தொடர்ந்து தடவி வர, படர்தாமரை நீங்குவதோடு, அது பரவுவதும் தடுக்கப்படும்.

ஆப்பிள் சீடர் வினிகர் :-

ஆப்பிள் சீடர் வினிகரில் பூஞ்சை காளான் எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ளது. இதனால் இவற்றைக் கொண்டு படர்தாமரைக்கு விரைவில் நிவாரணம் காணலாம்.

சூடம்/கற்பூரம் :-

படர்தாமரைக்கு நல்ல தீர்வை கற்பூரமும் வழங்கும். ஏனெனில் கற்பூரத்திலும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ளது.

கடுகு எண்ணெய் :-

கடுகு அல்லது அதன் எண்ணெயை தினமும் படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால், படர்தாமரை மறையும்.

உப்பு மற்றும் வினிகர் :-

உப்பை வினிகருடன் சேர்த்து கலந்து, படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால், நாளடைவில் படர்தாமரை மறைவதைக் காணலாம்.

ஆலிவ் எண்ணெய் :-

ஆவில் எண்ணெயை படர்தாமரையின் மீது தடவி வர, விரைவில் அது போய்விடும்.

மஞ்சள் தூள் :-

மஞ்சள் தூளின் மகிமையினால், பாக்டீரியாக்கள் மட்டுமின்றி, பூஞ்சையின் தாக்குதல்களையும் தடுக்கலாம். அதிலும் இதனை படர்தாமரை உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால், படர்தாமரை நீங்கும்.

பப்பாளி :-

பப்பாளியில் உள்ள பூஞ்சை காளான் எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சரும பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும். அதிலும் பச்சை பப்பாளியை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி வர வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...