WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Showing posts with label samaiyal tips. Show all posts
Showing posts with label samaiyal tips. Show all posts

Monday 18 May 2015

ஒன் இன்கிரிடண்ட் இட்லி!

ஒரே ஒரு பொருளை மட்டும் வைத்து இட்லி, தோசை, மற்றும் அடை செய்வதை இந்தச் சமையல் குறிப்பு மூலம் அறிந்து கொள்ளலாம்.

தேவையான பொருள் :

பாசிப்பருப்பு (ஆம், பாசிப்பருப்பு மட்டும் போதும்)

செய்முறை:

மிக்ஸியில் பாசிப்பருப்பை இட்லிக்கு அரைப்பதுபோல் அரைத்துக் கொள்ளவும். அதை உப்பு போட்டு கலந்து ஆறு மணிநேரம் புளிக்க வைக்கவும். பிறகு இட்லி பாத்திரத்தில் இட்லியாக ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
சுவையான பாசிப்பருப்பு இட்லி தயார்.

குறிப்பு :

1. தேவையென்றால் தோசையாகவும் சுட்டுக் கொள்ளலாம்.
2. வேண்டுமெனில் கடுகு உளுந்து, வெங்காயம், பச்சைமிளகாய், தேங்காய்துருவல் தாளித்துபோட்டு அடையாகவும் சுட்டுக்கொள்ளலாம்.
3. இதற்குத் தக்காளி சட்னி நன்றாக இருக்கும்.

Thanks  :  இனியவள்

கம்பங் கூழ் .(தயிர் சேர்த்தது ).

இன்றைய மதிய உணவு ..

.
கோடைக்கு இதமான கம்பங் கூழ் .(தயிர் சேர்த்தது ).
தேங்காய் துவையல் மற்றும் மாங்காய்(Fresh) ஊறுகாய் உடன் ..

டிப்ஸ் ..

கம்பங் கூழ் உடன் தயிர் அல்லது மோர் சேர்த்துக் கொள்ளுங்கள் .

ஊறுகாய் செய்வதற்கு காய் கறிகளை உபயோகித்து அவ்வப்போது Fresh ஆக செய்து கொள்ளுங்கள் ..

துவையலுக்கு தேங்காய் அதிகம் உபயோகித்து செய்யவும் ..(பொரிகடலை தவிர்க்கவும் )

வேர்க்கடலை பருப்பு இட்லி

தேவையானவை:

இட்லி மாவு -- 4 கப்
வேர்க்கடலை -- ஒரு கைப்பிடி
துவரம் பருப்பு -- ஒரு கைப்பிடி
கடலைப்பருப்பு -- ஒரு கைப்பிடி
துருவிய தேங்காய் -- ஒரு மூடி
பச்சை மிள்காய், இஞ்சி -- காரத்துக்குதத்குந்தபடி
கடுகு, மிளகு, உளுத்தம்பருப்பு -- தாளிக்க சிறிதளவு
கொத்துமல்லி -- ஒரு கைப்பிடி
உப்பு -- மிகவும் கொஞ்சமாக
எண்ணை -- தாளிக்க

செய்முறை:

வேர்க்கடலை, கடலைப்பருப்பு, துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து தேங்கா துருவல், இஞ்சி பச்சை மிளகாய் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்சியில் கரகரப்பாக அரைக்கவும்.

இந்த பேஸ்டை இட்லி மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதில் கடுகு, மிளகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்

இட்லி தட்டில் நிரம்ப மாவை ஊற்றி ஸ்டீம் பண்ணி எடுக்கவும்.

காய்கறிச்சாறு ..

(பீட்ரூட்,வெள்ளரி,தக்காளி ,நெல்லி,எலுமிச்சை ,வெற்றிலை ..)
..

அவித்த பீட்ரூட்..(எண்ணை சேர்க்கவில்லை .தாளிக்க வில்லை .சிறிது காரம்,உப்பு சேர்க்கப் பட்டுள்ளது )..

மசாலா ,எண்ணை ,உப்பு ,சீனி ,அரிசி குறைக்கப் பட வேண்டும் ..
அரிசிக்கு மாற்றாக சிறு தானியங்கள் சேர்க்கலாம் .

காய்கறி வகைகள் ,கீரை அதிகப் படுத்த வேண்டும் .

எத்தனை பேர் இதை பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறீர்கள் .

கறிவேப்பிலை சட்னி:

கறிவேப்பிலை சட்னி:
*******************************
கறிவேப்பிலை ஒரு பெரிய கொத்து

வரமிளகாய் 4

புளி நெல்லிக்காய் அளவு

உப்பு

எண்ணெய்

செய்முறை:
*****************

கறிவேப்பிலையை நல்லா கழுவி ஆறவெச்சுக்கணும், ஒரு சட்டில கொஞ்சமா எண்ணெய் ஊத்தி காஞ்சதும் அதுல வரமிளகாய் புளி உப்பு போட்டு நல்லா வறுக்கணும், பின்பு கறிவேப்பிலையை போட்டு பாதி வேக்காடா வறுத்து எடுக்கணும், பின்பு அம்மில, என்னது அம்மி ஆமாம் அம்மில நல்லா மையா தண்ணி ஊத்தாம அரைக்கணும், அவ்வளவுதான் கறிவேப்பிலை சட்னி ரெடி,

இது அருமையான சுவை உடம்புக்கும் நல்லது,

கம்மங்கூழுக்கு அருமையான காம்பினேஷன். ஒரு வாரம் வெச்சாலும் கெடாது, செஞ்சு அசத்துங்க.

கறிவேப்பிலை பொடி

கறிவேப்பிலை பொடி:
*********************************

தேவையானப்பொருட்கள்:
*************************************
கறிவேப்பிலை - 1 கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிறு நெல்லிக்காயளவு
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
புளி - ஒரு சிறு நெல்லிக்காயளவு
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு பற்கள் (சிறிய அளவு)- 2
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 அல்லது 2 டீஸ்பூன்

செய்முறை:
******************
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, தனியா, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகாய், புளி, பூண்டு எல்லாத்தையும் ஒவ்வொன்னாகப் போட்டு, தனித்தனியாக வறுத்துக்கோங்க . கடைசியில கறிவேப்பிலையைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி எடுக்கவும். கொஞ்சம் ஆறியதும் எல்லாத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு, உப்பையும் சேர்த்து சற்று கொரகொரப்பாகப் பொடித்து எடுங்க. அவ்வளவுதான்.

இதை சூடான சாதத்தில் போட்டு, சிறிது நெய் அல்லது நல்லெண்ணை விட்டு பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி/தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

சிறுநீரகக் கல்... இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!

இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

கை மருத்துவத்தில் சிறந்தது சுக்கு

சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

Thanks:Dinakarannewspaper

Sunday 17 May 2015

உடல் நலத்தை பாதுக்காக்கும் பூண்டின் மருத்துவ குணங்கள்....

பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே. இதில் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளன. இது ஒரு சிறந்த கிருமி நாசினி. வியர்வையை பெருக்கும், உடற்சக்தியை அதிகப்படுத்தும், தாய்பாலை விருத்தி செய்யும், சளியை கரைத்து சுவாச தடையை நீக்கும், ஜீரண சக்தியை அபிவிருத்தி செய்யும், ரத்த கொதிப்பை தணிக்கும். உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.

இதய அடைப்பை நீக்கும். நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும். ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியைப் பெருக்கி வீரியம் அதிகரிக்கக் கூடியது பூண்டு. பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. ரத்தத்தை தூய்மை படுத்துகிறது.

உடல் பருமன் குறைக்க உறுத்துணை புரிகிறது. உடலில் நல்ல கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது. ரத்த குழாய்களில் கொழுப்பு படிந்து அடைக்காமல் தடுக்க உதவிபுரிகிறது. வாயுத்தொல்லையை ஏற்படாமல் தடுக்கிறது. அஜீரணக் கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கிறது. புளிப்பு சேருவதால் உண்டாகும் வயிற்று எரிச்சலைபோக்குகிறது. வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். குடலில் உள்ள புழுக்களை அகற்றுகிறது. மலச்சிக்கலைப் போக்கி மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும். வியர்வையை பெருக்கி கழிவுகளை வெளியேற்றுகிறது. பித்தம் ஏற்படாமல் தடுக்கிறது.

ஒற்றைத்தலைவலியை போக்குகிறது. கருப்பையை வலுப்படுத்தும். சோர்வை போக்கி உடற் சக்தியை அதிகப்படுத்துகிறது. மூளையை பலம்பெறச் செய்கிறது. சளித்தொல்லையில் இருந்து பாதுகாக்கிறது. தாய்ப்பாலை விருத்தி செய்ய செய்கிறது. கைகால் மூட்டுவலி மற்றும் முடக்கு வாதம் ஏற்படாமல் தடுக்கிறது. தாதுவை விருத்தி செய்யும். நீரழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.

நாட்டுப்பூண்டையே அதிகமாக பயன்படுத்துங்கள். சைனா பூண்டை விட நாட்டுப்பூண்டிலேயே அதிக சத்து உள்ளது. பூண்டை மறைமுகமான விதத்தில் பூண்டு ஊறுகாய், பூண்டு மாத்திரை போன்ற வடிவில் சாப்பிடுவதை விட நேரடியாக சாப்பிடுவதே நல்லது. பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும். பூண்டின் காரம் போக சிறிது மோர் அருந்தலாம் இல்லை என்றாலும் ஒன்றும் பாதிப்பில்லை.

நட்சத்திர பழத்தில் உள்ள சத்துக்கள்:-

நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பழம் தாய்லாந்து, மலேசியா சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப் படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது.

இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. ஸ்டார் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.

இதை சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள அசடுகளையும், பழைய மலக்கட்டுகளையும் வெளியேற்றும். இப்பழம் கிடைக்கும் காலங்களில் அதிகளவு சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கலின்றி வாழலாம். அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாயுவின் சீற்றம் அதிகமாகி மூலப் பகுதியைத் தாக்குகிறது.

இதனால் மூலநோய் உண்டாகிறது. இந்த மூல நோயின் பாதிப்பிலிருந்து விடுபட ஸ்டார் பழத்தை இரவு உணவுக்குப் பின் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும். மழைக் காலத்தில் சருமத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். ஸ்டார் பழம் சாப்பிட்டு வந்தால் சரும நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி ஸ்டார் பழத்திற்கு உண்டு. ஸ்டார் பழத்தை கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஸ்டார் பழம் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது.

இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும். 10 கிராம் ஸ்டார் பழத்தில் கார்போஹைட்ரேட்ஸ் - 6.73 கிராம், சர்க்கரை - 3.98 கிராம், கொழுப்பு - 0.33 கிராம், புரோட்டீன் - 1.04 கிராம், பான்தோதினிக் அமிலம் - .39 கிராம் %, போலேட் - 12 கிராம், வைட்டமின் சி - 34.4 கிராம், பாஸ்பரஸ் - 12 மிலி கிராம், பொட்டாசியம் - 133 மிலி கிராம், துத்தநாகம் - 12 மிலிகிராம் உள்ளது.

பூசணிக்காயில் ஒரு டயட் உணவு..


************************************
மிகவும் டயட் கான்ஷியஸ் ஆக இருப்பவர்களின் பெரும் பிரச்சினை வாய்க்கு ருசியான உணவுகளை சமைப்பது.
பச்சைக் காய்கறிகளும் பழங்களும் அலுத்துப் போகும்போது, அருமையான மாற்று உணவு இந்த அரை வேக்காட்டுச் சமையல் முறையில் சமைக்கப்படும் காய்கறி உணவுகள்.
இதில் உள்ளது பரங்கிக்காய் எனப்படும் மஞ்சள் வண்ணப் பூசணி.
பூசணியைப் பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அதோடு நறுக்கிய சின்ன வெங்காயம், ஒரு சின்னத்துண்டு பச்சை மிளகாய், சிறிது உப்பு (உப்பு கொஞ்சம் குறைவாகவே இருக்கட்டும்) சேர்த்து, காய் மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மூடி வைக்கவும். 4 அல்லது 5 நிமிடம் போதும். அடுப்பை அணைக்கவும்
மூடியைத் திறந்து இரண்டு ஸ்பூன் தேங்காய்த்துருவல், நறுக்கிய மல்லித் தழை சேர்த்தால் ...
எளிமையான, எண்ணெய் சேர்க்காத, சத்தான , அளவான காரம் உப்பு சேர்ந்த சுவையான உணவு தயார்.
காய் வேக வைத்த அந்தத் தண்ணீரோடு, சேர்த்து உண்ண, சுவை அபாரமாய் இருக்கும். ஒரு பெரிய கப்பில் எடுத்துக் கொண்டால், நன்கு பசி தாங்கும்.
இந்த முறையில் காலிஃப்ளவர், கேரட், சுரைக்காய், நீர்ப்பூசணி, பீர்க்கங்காய் போன்ற காய்களையும் கூட அரை வேக்காட்டில் சமைத்து உண்ணலாம்.

அமைதி! ஆரோக்கியம்! மூலிகை இல்லம்

வீட்டைவிட்டு வெளியே வந்தாலே, டென்ஷன். அப்படி எனில், வீடாவது அமைதியைத் தர வேண்டும்தானே? ‘‘இருப்பதோ ரெண்டு ரூம். இதுல, எப்பப் பாரு டி.வி வேற, டென்ஷன் இல்லாமல் இருக்கணும்னா கிராமத்துக்குத்தான் போகணும்’’ என்பார்கள். நகரங்களில் டென்ஷன் இயல்பு, கிராமங்களில்தான் அமைதி கிடைக்கும் என்பது, பொதுவான மனநிலை. வீட்டையே தோட்டமாக மாற்றினால், கிராமங்களின் அமைதியை, நகரங்களிலும் சாத்தியப்படுத்தலாம். அவை மூலிகைத் தோட்டமாக இருந்தால், ஆரோக்கியமும் போனஸ். ஆரோக்கிய வீடுகளுக்கு வழிகாட்டுகிறது இந்தப் பக்கம்…

வெந்தயக் கீரை

10 நாட்களில் வளர்ந்துவிடும். இதை உட்கொண்டால், உடல் குளிர்ச்சி அடையும். அல்சர் பிரச்னை குறையும். மோருடன் வெந்தயக் கீரை சாற்றைக் கலந்து குடித்தால், தொண்டை முதல் குடல் வரை நன்மையை உண்டாக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

புதினா

புதினா இலைகளைப் பயன்படுத்தும்போது, அதன் தண்டுகளைத் தூக்கி எறியாமல், தொட்டியில் நட்டு வைத்தாலே போதும், வளர்ந்துவிடும். புதினாவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. நார்ச்சத்து நிறைந்தது. வாய் துர்நாற்றத்தைப் போக்கி, பசியைத் தூண்டும். புதினா இலையில் டீ தயாரித்தும் அருந்தலாம்.

துளசி / மின்ட் துளசி

உணவு செரிக்காமல் போனால், நான்கு துளசி இலைகளைச் சாப்பிடலாம். செரிமானத்தைத் தரும். பசியைத் தூண்டும். தினமும் ஒரு துளசி இலையை, டீ அல்லது பழச்சாறுடன் கலந்து சாப்பிட, நோய்கள் அருகே வராது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். சளி, இருமல், கிருமித் தொற்று போன்றவற்றைக் குணமாக்கும். துளசி வகையில் ஒன்றான மின்ட் துளசிக்கும் இதே பலன்தான். உடலுக்குக் குளிர்ச்சியையும் புத்துணர்வையும் தரும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

மணத்தக்காளி

மணத்தக்காளி செடியை வெட்டி, தொட்டியில் வைத்தாலே, வளர்ந்துவிடும். வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்குச் சிறந்த மருந்து. நச்சுக்களை நீக்கும். மணத்தக்காளி பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, மலச்சிக்கல் பிரச்னை தீரும். நல்ல தூக்கத்தைத் தரும்.

லெமன் கிராஸ்

புல் போன்று இருக்கும் இந்தச் செடியில் ஒரு இலையைக் கிள்ளி, கசக்கி முகர்ந்தால் எலுமிச்சை வாசனை வரும். இதன் வாசனை கொசுக்களுக்குப் பிடிக்காது என்பதால், கொசுக்கள் வீட்டினுள் வராது. உணவு செரிக்காமல் அவதிப்படுவோர், லெமன் கிராஸை வெந்நீரில் போட்டு, கஷாயமாகக் குடிக்க, உடனடி பலன் கிடைக்கும். பால் கலக்காத டீயில் சேர்த்துக் குடிக்கலாம். சுவை அருமையாக இருக்கும்.

கொத்தமல்லி

நாட்டு தனியாவை தரையில் தேய்த்து, பின், மண்ணில் புதைத்தால் 10 நாட்களிலே கொத்தமல்லி வளர்ந்துவிடும். தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளலாம். கொத்தமல்லியைச் சாறாகவோ,கஷாயமாகவோ குடித்தால், நச்சுக்கள் நீங்கும். கல்லீரல் சுத்தமாகி, பலப்படும். பூஞ்சைத் தொற்றுக்களைப் போக்கும். கொத்தமல்லி இலைகளை அரைத்து, தேன் கலந்து, பூசினால் சருமத் தொற்றுக்கள் குணமாகும்.

கற்றாழை

இளமையைப் பராமரிக்கும் மூலிகை. சருமத்தின் மிகச்சிறந்த மாய்ஸ்சரைசர். தோல் சீவி, கற்றாழையின் சதைப்பகுதியை மட்டும் எடுத்து, நன்றாகக் கழுவி, மோர் அல்லது கருப்பட்டியுடன் சாப்பிட்டுவர, கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் தீரும். உடல் வெப்பம், வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும். சைனஸ், ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள், கற்றாழையைச் சருமத்திலோ, கூந்தலிலோ பூசுவதைத் தவிர்க்க வேண்டும்.

கற்பூரவல்லி

குழந்தைகள் இருக்கும் வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை. அடிக்கடி சளி, இருமல், நெஞ்சுச் சளி வந்தால், கொழுந்து இலையாகப் பறித்து, ஒரு கல் உப்புடன் கலந்து மெல்லலாம். காலை வேளையில் சாப்பிட வேண்டும். இரவில் சாப்பிட்டால், தூங்கவிடாமல் சளி வந்துகொண்டே இருக்கும்.

பிரண்டை

மூலநோய், மூட்டுப் பிரச்னை இருப்பவர்களுக்கு அருமருந்து. வளர்க்க எந்தவிதப் பராமரிப்பும் தேவை இல்லை. பிரண்டையை, நெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கிச் சாப்பிட வேண்டும். வயதானவர்கள் இருக்கும் வீட்டில், பிரண்டைச் செடி அவசியம் இருக்க வேண்டும்.

அருகம்புல்

உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இது ஒரு எனர்ஜி பூஸ்டரும்கூட. காலையில் ஜூஸாகக் குடித்துவர, வயிறு சுத்தமாகும். நச்சுக்கள், கழிவுகள் வெளியேறும். ரத்தசோகைப் பிரச்னை தீரும்.
கீழாநெல்லி

மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும். அடிக்கடி சாப்பிடக் கூடாது. மாதம் இருமுறை சாப்பிடலாம். சிறுநீரகப் பாதிப்பு, சிறுநீர் கடுப்பு, சிறுநீர் வராமல் இருக்கும் தொந்தரவுக்கு, கீழாநெல்லி சூப் சாப்பிடலாம். அதிகக் கசப்புச் சுவை கொண்டது. கல்லீரலைச் சுத்தம் செய்யும்.

தூதுவளை

இந்தக் கீரையில் கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்பு, பற்கள் தொடர்பான பிரச்னைகள் சரியாகும். இருமல், சளி, ஆஸ்துமா இருப்பவர்கள், ரசமாகச் செய்து குடிக்கலாம். கை, கால் நடுக்கத்துக்கு அருமருந்து. நரம்பு தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும். மலச்சிக்கலைப் போக்கும்.

வெற்றிலை

வெற்றிலையை வளர்க்க கொஞ்சம் ஈரப்பதம் அவசியம். செரிமானத்துக்கு உதவும். உணவில் துவர்ப்புச் சுவை இல்லாததை உணவுக்குப் பிறகு, சாப்பிடும் வெற்றிலை ஈடு செய்யும். பூச்சிகள் கடித்தால், வெற்றிலையும் மிளகும் சேர்த்துச் சாப்பிட, விஷத்தை முறிக்கும்.

திருநீற்றுப்பச்சிலை

சருமத்தில் ஏற்படும் புண்களுக்குச் சிறந்த மருந்து. பெரிய அளவில் சீழ் கோர்த்த கட்டிகள், விஷப் புண்களையும் சரியாக்கும். திருநீற்றுபச்சிலையைக் கசக்கி, பருக்கள், கட்டிகளின் மேல் தடவலாம். இலைகளை மிக்ஸியில் அரைத்தால், அதன் சூடும் வேகமும் சத்துக்களை நீக்கிவிடும். உரலில் இடித்து, சாற்றை சருமத்தில் பூச வேண்டும்.

சிறியாநங்கை

சிறியாநங்கைச் செடியை வளர்த்தால், விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் வராது. ஏதாவது விஷக்கடி ஏற்பட்டாலும், அதன் மேல் சிறியாநங்கையின் இலைகளைக் கசக்கித் தேய்க்கலாம். இந்த இலைகள் கசப்புச் சுவையைத் தரும். இரண்டு நாள் வரை அந்தக் கசப்பின் சுவை நாக்கிலே இருக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

Thanks - Doctor Vikatan

உரமில்லா மற்றும் மருந்தில்லா கீரைகள்

எனக்கு இளம் வயதிலிருந்தே எல்லா வகைக் கீரைகளையும் மிகவும் பிடிக்கும். தினமும் ஒருவகை கீரை உணவிலிருந்தால் மிகவும் பிரியம்.
அது எந்த அளவுக்கு என்றால் கீரை சாப்பிட்டே சிறுநீரகக்கல் வந்த அளவிற்கு!!!!!!!!!
. இவ்வளவு பிரியம் சிறிது சிறிதாக எனக்கு மறைய ஆரம்பித்தது. . காரணம் நான் உழவர் சந்தையில் சுமார் நான்கு ஆண்டுகள் பணியாற்றியபோது மனிதர்களின் ஆரோக்கியத்தினைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அங்கு கீரை கொண்டு வரும் விவசாயிகள் எல்லாவகை உரத்தினையும் பூச்சிமருந்துகளையும் மனசாட்சி இன்றி உபயோகப்படுத்தி கண்ணைப் பறிக்கும் பசுமையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு விற்பனையை செம்மையாக நடத்திவந்தனர்.
அதனை கைவிட விவசாயிகளின் பலமுறைகளில் முயன்றும் தோல்வியே பரிசாக கிடைத்தது.
எனக்கு தெரிந்தே அதிக கீரைகளை விரும்பி சாப்பிடும் வழக்கமுள்ள இருவர் புற்று நோய் வந்து இளம் வயதிலேயே சிரமப்பட்டு உயிரிழந்தனர். அவர்களுக்கு எவ்வித கெட்ட பழக்கம் இல்லை என்பது கூடுதல் தகவலாகும்.
தற்சமயம் மார்க்கெட்டில் விற்கப்படும் கீரைகளின் மூலம் புற்று நோய் உருவாக காரணம் யாதெனில் குறைந்த வயதுள்ள கீரைகளில் இடப்படும் யூரியா உரத்தினை பயிர் முழுமையாக செலவழிக்காமல் பயிரின் பாகத்திலேயே நிலை நிறுத்தி இருக்கும்பட்சத்தில் அவற்றினை உட்கொள்ளும் மனிதனுக்கு புற்று நோய் வரும் வாய்ப்புகள் பல மடங்காகும்.
நிலைமையின் தீவிரம் அறிந்தபோது கீரைகளையும் விட முடியவில்லை. மார்க்கெட்டில் விற்கப்படும் கீரைகளையும் சாப்பிட இயலவில்லை. விளைவு
. அதன்பின் எனது சிறிய வீட்டுத்தோட்டத்தில் கீரைகளுக்கு அதிக முக்கியதுவம் கொடுத்து சாகுபடி செய்தேன்.
வீட்டிலுள்ள முருங்கை மரம் அதிக காய்கள் காய்த்தாலும் எனக்குப் பிடித்தது அதன் இலைகளே.
சக்குர்மேனிஸ் கீரை பச்சையாகவே சாப்பிட ஏற்றதாக இருந்ததால் அதுவும் தோட்டத்தில் சில குத்துக்கள் இடம் பிடித்தது
துாதுவளை சிறிதளவு தான் எடுத்துக் கொள்ள இயலும் என்றாலும் அதுவும் ஒரு மூலையில் சாகுபடியாகிறது.
கறிவேப்பிலை ஒரு பெரிய மரமே உள்ளது.
விரைவில் வளரும் வயதுடைய கீரைகளை தோட்டத்தில் தரை தளத்தில் வளா்த்து வந்தபோது உயரமான தண்ணீர் தொட்டியினை பிரயோசனமான முறையில் உபயோகப்படுத்த ஞானோதயம் ஏற்பட்டது. . அதற்காக வெவ்வேறு சில்பாலின் பிளாஸ்டிக் கொள்கலன்கள் வாங்கி தண்ணீர் தொட்டி மேல்பரப்பில் வைத்து சிறுகீரை- அரைக்கீரை- தண்டுக்கீரை –பசலைக்கீரை- கொத்தமல்லிகீரை-பொதினாக்கீரை ஆகியவற்றினை வளர்த்து வருகிறோம். . . சொந்தமாக வீட்டுத் தோட்டத்தில் தயாரித்த மண்புழு உரத்தினை மட்டுமே பிரத்தியோகமாக அவற்றிற்கு பயன்படுத்தி சாகுபடி நடை பெற்று வருகிறது. தற்சமயம் வீட்டில் இருக்கும் எங்கள் இருவருக்கும் மேற்கண்ட கீரைகள் போதுமானதாக உள்ளது.
எப்படியோ வயது ஆக ஆக உயிரின் மேல் பிடிப்பு மனிதனுக்கு அதிகமாகவே வருகிறது. எல்லோரும் ஒருநாள் இந்த உலகத்தைவிட்டுபோய்த்தான் ஆக வேண்டும் .இருந்தாலும் மரணம் நல்லபடியானதாகஇருக்கவேண்டும் என்ற ஆசைதான் இத்தனை முயற்சிக்கும் காரணமாக இருக்குமா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!???????????????????????????

Related Posts Plugin for WordPress, Blogger...